Saturday, January 31, 2009

மூன்று நபர்கள்

ஒரு கோடீஸ்வரர் இருந்தார் .அவர் இரக்க சுபாவமுள்ளவராகவும்இருந்தார் ஆகையால் அவர் அடிக்கடி தானமும் செய்து வந்தார் ஒரு நாள் அவர்தானம் செய்ய ஆரம்பித்ததில் ஒரு ஏழை அவரைஅணுகினான் ," ஐயா எனக்கு ஐந்து ரூபாய் வேண்டும் .தாருங்கள் "என்றான் அதற்கு அவர் "என்ன இத்தனை அதிகாரத்துடன் கேட்கிறாய் .நீ ஏழ்மை நிலையில் இருந்தாலும் அகம்பாவம் கொண்டிருக்கிறாய் .நான் உனக்கு இரண்டுரூபாய் தருகிறேன் .எடுத்துக்கொண்டு போய் வா " என்றார் அவன் முணுமுணுத்தபடி அதைவாங்கிக்கொண்டு நகர்ந்தான். இரண்டாவதாக இன்னொரு ஏழை வந்தான் , தயங்கியபடியே நின்றான் பின் "ஐயாரொம்ப பசி ஐயா நாலு நாட்கள் ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்கவில்லை எனக்கு பெரிய மனது செய்து உதவுங்கள் என்றுகைகூப்பியபடி வேண்டினான்வ்கோடீஸ்வரரும் அவனது பணிவினால் மனம் மகிழ்ந்து " இந்தா பத்து ரூபாய் சந்தோஷமாக எடுத்துக்கொள் திருப்தியாக சாப்பிடு "என்றார் அவனும் மகிழ்ச்சியுடன் அதைப்பெற்றுக்கொண்டுபோய்ச்சேர்ந்தான்மூன்றாவதாக மற்றொரு ஏழை வந்தான் .அவன் அங்கு வந்ததும் வணங்கினான் " ஐயா வணக்கம் உங்கள் நல்ல குணத்தைப் பற்றிகேள்விபட்டிருக்கிறேன் ஆகையால் இந்த நல்ல மனிதரைத்தரிசிக்க வந்தேன் தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை நீங்கள்மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறீர்கள் ஏழைகளுக்கு நீங்கள் தான் தெய்வம் "என்றான் இத்தனைப் பேசியும் தனக்கு பசி என்றோ ஏதாவது கொடு என்றோ கேட்கவில்லை ,கோடீஸ்வரர் அவனது பணிவான இனிய பேச்சினால் கவரப்பட்டார் பின்"ஐயா வெகுதூரம் நடந்து மிகக் களைப்புடன் வந்திருப்பீர்கள்,முதலில் உணவுசாப்பிடுங்கள் பின் பேசலாம் "என்றார் ,அவனும் உணவு உட்கொண்டான் பின் ஐயா மிக்க நன்றி" என்றான்"இப்பொழுது சொல்லுங்கள் நான் மேலும் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ""ஐயா என் பசிக்கு நல்ல உணவு அளித்தீர்கள்,வேறு என்ன வேண்டும் ?என் மீதுகாட்டிய அன்பை என்னவென்று சொல்வது? அந்த இறைவன் எல்லா நலன்களையும்கொடுப்பாராக"இதைச்சொல்லும் போதே மனம் நெகிழ்ந்து போனான் அவன் ,கோடீஸ்வரருக்க்கு அவன் மேல் இருந்த மதிப்பு பன்மடங்கானதுஅவனைத் தன்னுடனே இருக்க அன்பு வேண்டுகோள் விடுத்தார்அவருக்கு உதவி செய்யவும் ஒரு வேலைப் போட்டுக்கொடுத்தார்அவனுக்கென்று ஒரு சின்ன வீடும் கட்டிக்கொடுத்தார் முழு ஆதரவும் அளித்தார்இந்தக் கதையில் நாம் கோடீஸ்வரரைக் கடவுள் என்று எடுத்துக்கொள்ளலாம்மூன்று ஏழைகள் மூன்று வித பக்தர்கள்கடவுளிடம் என்ன கேடகவேண்டும் என்றும் எப்படிக்கேடக வேண்டும் என்றுயோசிக்காதவர்கள் முதல் வகைகடவுள் கொடுத்தது போதும் என்று திருப்தி அடைந்து தங்களுக்குதேவையானதை அவர் அறிவார் என்று உணரும் பகதர்கள் இரண்டாவது வகைஇறைவா எல்லாம் உன்னிடம் சமர்ப்பணம் எல்லாம் நீயேஉன் அருளால் தான் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒவ்வொரு மூச்சிலும் அந்த இறைவனையே நினைக்கும் பக்தர்கள் மூன்றாவது வகை ,,,,அவனன்றி ஒரு அணுவும் அசையாது

.அன்புடன் விசாலம்

No comments: