Saturday, January 24, 2009

காத்தருளவாய் மாருதியே

அருள் புரிவாய் மாருதியே

அருள் புரிவாய் மாருதியே

அல்லல் களைவாய் மாருதியே

வீரம் ஞானம் வெற்றி தந்து

மன உறுதி வழங்கும் மாருதியே

அசோக வனத்தில் அன்னையைக் கண்டாய்

அவள் சோக மனதில் ஆறுதல் தந்தாய்

ஸ்ரீ ராமனுடைய தூதனும் ஆனாய்

,எண்ணியதை முடித்தும் வைத்தாய் மாருதியே

இராம நாமத்தில் மூழ்கிப்போனாய் ,

சீதைக்கு கணையாழியும் கொடுத்தாய்

வாயு வேகத்தில் சஞ்சீவி கொண்டு

இலக்குவன் உயிரைக்காத்து நின்றாய்

.அஞ்சனைக்குமாரன் மாருதியே

சிறிய திருவடி மாருதியே

சிரஞ்சீவி பட்டம் பெற்ற மாருதியே

பஞ்ச முகமான மாருதியே ,

ஈரேழு தலமும் புகழ்ந்து வணங்கும மாருதியே செங்கமலத்திருவின் திருவருள் பெற்ற மாருதியே

காமனை வென்றவனே!காலத்தை வென்றவனே

காத்தருள்வாய் , நின் தாள் பணிந்தேன் அனுமானே

அன்புடன் விசாலம்

No comments: