Tuesday, January 6, 2009

நேருஜிக்கு தன் மகள் சௌ இந்திராபிரயதர்சினியை ஒரு மகன் போல் வளர்க்க ஆசை,ஏனென்றால் அவருக்கு முதலில் ஒரு ஆண்மகவு பிறந்து உடனேயே இறந்து விட்டது , ஆகையால் இந்திராஜியை அவர் மகனாக நினைத்து அவருக்கு குதிரை ஓட்டும் பயிற்சி ,நீச்சல் பேட்மிண்டன்,முதலியவைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தித்தந்தார் ,அவரது தைரியமும் உடனடியாக்த் தீர்மானித்து செயல் புரியும்மனோதிடமும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது .அவரை அவரதுதந்தை அன்புடனும் அத்துடன் கண்டிப்பு ஒழுங்குமுறையுடனும் வளர்த்தார் ,அவர் இந்தியாவை மிகச்சிறந்த நாடாக ஆக்கவும் கனவு கண்டார் .அந்தக் கனவை அவர் மகள் செயல்படுத்தினார் .இந்திராஜி மிகச்சிறந்த அறிவாளி .நடக்கப் போவதை முன் கூட்டியே சிந்தித்து செயல் படுவதில் திறமையனவர். இந்த அறிவு அவருக்கு அவர் படித்த பல புத்தகங்ளினால் மேலும் கூர்மையானது ,அவரதுதந்தை அவருக்கு அவரது பிறந்த நாளுக்கு புத்தகங்கள்தான்பரிசாகத் தருவாராம் ,தவிர அவர் தன் மகளுக்கு எழுதும் கடிதங்களும்சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவே இருக்கும் அந்தமாதிரி புத்தகங்களில் "Glimpses of world history"யும் Letters from a fatherti to a daughter " என்ற்வைகளைப் பலமுறை அவர் படிப்பாராம் .மிகவும் தரமிக்க புத்தகங்களைப் படித்ததால் அவர் எண்ணங்களும்உயர்ந்து நின்றன . அவரது தந்தை சுதந்திரப்போராட்டத்தில்அல்மோரா ஜெயிலில் இருந்தபோது 1935ல் புத்தாண்டு முதல் நாள்ஸ்யின்ஸ் ஆப் லிவ்விங் " என்ற புத்தகம் அனுப்பி வைத்தார்.இதைப்படித்தவுடன் இந்திராஜியிடம் ஒரு நல்ல மாற்றம்ஏற்பட்டு திடநிச்சியம் அசாத்திய துணிச்சல் போன்றவை வெளிப்பட்டன ,அவர் "ஜோன் ஆப் ஆர்க்"புத்தகம் படித்தப்பின் "அப்பா நானும்ஜோன் ஆப் அர்க்"போல் மிகவும் வீரமான பெண்மணி ஆவேன் "என்றார் .இவரது தாய் திருமதி கமலா நேருவும் மிகவும் மென்மையானவர்,பண்புள்ளவர் .இவரிடமிருந்து இந்திராஜி எளிமை , புன்முறுவல் ,அடக்கம் .பணிவு எல்லாம் கற்றுக்கொண்டார் ,ஆனால் அவரதுஅன்னை உடல் நலம் குன்றி டி பி யால் மிகவும் அவதிப்பட்டதால் நேருஜியின்
பொறுப்பு மிக அதிகமானது .அவரை நாலு வருடங்கள் பூனாவில் படிக்க அனுப்பிவைத்தார் .ஆனால் அம்மையாரோமூன்று வருடத்திலேயே நாலு வருடப்படிப்பை முடித்து விட்டார் .பினவர் சந்தினிகேதனில் படிக்கச்சென்றார்,அங்கு எல்லோருக்கும் மிகவும்வியப்பு தான் ,எத்தனைப் பெரிய கோடீஸ்வரி ஒரு சாதாரண இயற்கைச்சூழலால்சூழப்பட்ட ஒரு பள்ளியில் வந்துஎப்படி படிப்பார் ? அவர் எப்படி வருவார்?காரிலா ?வேலயாட்களுடனா?என்று பலசந்தேகங்கள்,,,,,,,,ஆனால் அவர் நட்ந்து ஒரு பழைய சூட்கேஸுடன் கையில்ஒரு படுக்கையுடன்வந்தது நம்பமுடியாததாக இருந்தது , அங்கும் மணிபுரி நடனம்கற்றுக்கொண்டார் அங்கு எல்லோர் உள்ளமும் கொள்ளைக்கண்டார் அவர் பின்ஆக்ஸ்போர்டு படிப்பு முடிந்தப்பின் இந்தியா வந்துசுதந்திரப்போராட்டத்தில் ஈடு பட்டார் ,வானர சேனா என்றும் ஒரு பிரிவைஆரம்பித்த்து போராட்டத்தில் பங்கு கொண்டு தன் தந்தைக்கும் உதவுவாராம் ,"விளையும்பயிர் முளையிலேயே தெரியும் என்றபடி சிறுவயதிலிருந்தே ,தேசப்பற்றுடன் வளர்ந்த இவர் இன்று எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்,அவரது வயது பிறந்த நாள் நவம்பர் 19 ,,,,,,,,,,,என்னைக்கவர்ந்த அவரை நினைத்து வணங்குகிறேன் ,,,,,

No comments: