Monday, January 5, 2009

சுவாமியே சரணமய்யப்பா

ஸ்வாமியே சரணமய்யப்பா,,,,,,,,,,"பள்ளிக்கட்டு சபரிமலைக்க்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்றகோஷங்கள் கேட்கின்றன குருஸ்வாமி வழிக்காட்ட பகதர்கள் பின் செல்கின்றனர்முதலில் போகும் இடம் எரிமேலிபேட்டைஇங்கு பகதர்கள் பேட்டை துள்ளல் செய்கிறார்கள் இந்த இடத்தில் தான் ஸ்ரீமணிகண்டன் மகிஷியுடன் போர்செய்தான் இதை நினைவுகூரும் நிகழ்ச்சிதான் இது,அவர்கள் பாடும் பாட்டு நமையும் பாடவைக்கிறது "ஸ்வாமியே அய்யப்ப ,அய்யப்பஸ்வாமியே ,,சுவாமி திந்தக்க தோம் தோம் ஐயப்ப திந்தக்க தோம் தோம் என்றகோஷத்துடன் பாடல் , ,,,,,,,பேட்டைத்துள்ளிக்குப்பின் எரிமேலி சாஸ்தா பின் வாபரின் தரிசனம்,,,,,அதன் பின் காட்டு வழி தொடங்குகிறதுஅவர்கள் ஒரு நாள் தங்குவது பம்பாநதி தீரத்தில் தான் , இந்தப்பம்ப நதியை தக்ஷிண கங்கை என்றும் கூறுகிறார்கள் ,இது மிகச் சிறப்பு வாய்ந்த இடம் ஏனென்றால் ஐயப்பனைப் பிறக்கச் செய்தஇடமல்லவோ ? ஈசனும் மோகினி அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவும் தங்கள் சக்தியைஒன்று கலக்கச் செய்து ஹரிஹரனை உண்டாக்கிய இடம் ,அதோடு மட்டுமல்ல! பந்தளராஜா குழந்தை ஹரிஹரனைக் கண்டு எடுத்த இடமும் இதுதான் .இங்கு குளித்து பின் பூஜை செய்தப்பின் பக்தர்களுக்கு கிடைக்கும்சாப்பாட்டை "பம்பாசத்தி" என்கின்றனர் வடை பாயசத்துடன்சக்கைவரட்டி எரிசேரி ஓலன் , அவியல் , என்று பல ஐட்டங்கள்இருக்கும் சரியான பிறந்த நாள் விருந்துதான் .இந்த விருந்திலேசாதி இல்லை பேதமில்லை பண்க்காரரென்று இல்லை ஏழையென்றும் இல்லை ,எல்லோரும்ஒரே குலம் எல்லோரும் ஒரே இனம் என்றபடி அமைகிறது ,தவிர ஐயப்பனும் பகதர்வடிவில் வந்து அமர்ந்து "சத்தி"saddhi}உண்வாராம் ஆகையால் எல்லாபக்தர்களும் தம் அருகில் அமர்ந்திருப்பது ஐய்யப்னோ என்று எண்ணி மகிழ்ந்துபோவார்கள்.இதற்கு சமைப்பது இலேசல்ல ,,எத்தனைக் கூட்டம் ,,,அன்னதானம் நடந்தபடியேஇருக்கும் ,இதற்கென்று மூட்டப்பட்ட விற்கின் சாம்பல் மகா பிரசாதமாக ஆகிவினியோகிக்கப்படுகிறது இதனால் வளர்க்கும் அடுப்புக்கள் 108 ,,இந்தஅடுப்புச் சாம்பலை அல்லது பஸ்மத்தை பிரசாதமாக கன்னிசாமி வீடு எடுத்துவரவேண்டும்ஹரித்துவாரில் கங்கா மாதாவுக்கு மாலை ஆர்த்தி காட்டுவார்கள்ஒவ்வொரு அகல் விளக்கோ அல்லது பனை ஓலையில் விளக்கோ ஏற்றி ஆர்த்தி முடியும்தருவாயில் அவைகளை கங்கை நதியில்மிதக்க விடுவார்கள் ஒரே சமயத்தில் நூறுகண்க்கான விளக்குக்ள்மித்ந்துப்போவது கண்கொள்ளாக்காட்சிதான் ,,அதேபோல் இங்கும்மூங்கிலால் செய்யப்பட்ட சிறு சப்பரங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துநதியில் விடுவார்கள்,இவரது இருமுடிகளை ஐய்யப்னாகவே நினைத்து அவற்றுக்கும் தீபபராதனைச் செய்து பின் தலையில் ஏற்றி வைப்பார் ,,,,,,,பமபா நதி பார்க்க மிக அழகு ,,,கோயிலுக்கு போக முடியாதவர்கள் பம்பா நதி தீரத்திற்காவது அவசியம் போக வேண்டும் சபரி மலைக்குப் போகும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டுள்ளது ,,,,அங்குப் போக அனுஷ்டிக்கும் நியதிகளால்ஒரு ஒழுங்கு முறை , மனத்தூய்மை எல்லாம் ஒன்றாக நினைக்கும் பக்குவம்எல்லாம் வந்துவிடுகிறது ஒரு வேளை சாப்பாடு பின் பலகாரம் என்பதில் சீரணசக்தி சீராக இயங்குகிறது ,படாடோபம் அஹங்காரம் மறைகிறது ,தேகப்பயிற்சி போல் நிறைய நடை இருப்பதால் உடல் சீராகுகிறது ,மனம் ஒருமைப்படுகிறது ,ஞாபகச்சக்தி பெருகுகிறது ,

No comments: