Saturday, January 24, 2009

கலைவண்ணம் அங்குக்கண்டேன்

நான் ஒரு சமயம் மணவர்களைச் செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போயிருந்தேன்.அங்கு ஒரு பெரிய மஹாவிஷ்ணு அழகாக ஒரு குன்றின் மீதுபள்ளிக்கொண்டிருக்கிறார் ,இந்தச்சிலையைப்போல் பெரிய சிலை வேறு எங்கும்கிடையாது என நினக்கிறேன் இது மஹாபலிபுரத்தில் உள்ள சிற்பக்கலையை ஒட்டிஅமைந்த ஒன்று செஞ்சிக்கோட்டைக்கு மூன்று மைல்களுக்கு அப்பால் இந்தப்பள்ளிக்கொண்ட பெருமாளைக் காணலாம் சிலையின் நீளம் இருபது அடி ,உயரம்ஒன்பது அடி சிங்கவரத்தில் அமைந்த இந்த ரங்க நாதனை வழிப்பட்டவன் நம் தேசிங்கு மன்னன். தெய்வீக அழகில் உருவ அமைப்பில் இதன் அழகு சொல்ல இயலாது திண்டிவ்னத்திலிருந்து திருவண்ணாமலைப்போகும் பாதையில்பிரசித்தப்பெற்றசெஞ்சிக்கோட்டையைக் காணலாம் அங்கு இருக்கும் ஒவ்வொரு தூணும் மிகவும் அழகாக சிற்பக்களஞ்சியமாக விளங்குகிறதுகோட்டை வாசலில் நம்மை வரவேற்பவன் ஒரு வீரன் அவன் பெரிய மீசையுடன்கம்பீரமாக கையில் கத்தியும் கேடயமுமாக நின்றுக்கொண்டிருக்கிறான், அதைத்தாண்டிப்போனால் இன்னொருஅதிசயத்தைக் காண்கிறோம் ஒரு சிறு குன்றில் ஆஞ்சநேயர்விஸ்வரூப காட்சி நமக்கு அளிக்கிறார். மிகச் சக்தியுள்ள ஆஞ்சநேயரைப்பார்க்கவும் நேர்த்திகடனைச் செலுத்தவும் மக்கள்வந்தவண்ணம் உள்ளனர் .மலைக்கோட்டைக்குள் நெற்களஞ்சியங்களைக் காண்கிறோம்.அத்துடன்கொத்தளங்களும் பெரிய கலயாணமண்டபங்களும் இருக்கின்றன ,இவைகள் பழைய மன்னர்களின்சாதனைகளுக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு , மதுரை வீரன் சிலையும்,,தாயும் சேயும் மகிழும் குரங்குகளின் சிலைகளும் மிக அற்புதமாகச்செதுக்கப்பட்டுள்ளன கோட்டைக்குள் ஒரு பாழடைந்தவெங்கடநாரயணரின் கோயிலும் காண்ப்படுகிறது பகைவர் வாரமல்காத்துக்கொள்ள பெரிய அகழியும் கட்டப்பட்டிருந்தன .உள்ளே நடக்க நடக்க பல காண இருக்கின்றன ,நான் இதற்கே மிகவும் களைத்து விட்டதால் அதிகம் பார்க்க இயலவில்லை,இளைஞர்களுக்கு மலை ஏறும் பயிற்சிக்கும்adventure செய்யவும் மிகச் சிறந்த இடம் ,பல பள்ளியிலிருந்துஇந்த இடத்திற்கு உல்லாசப்பயணம் செய்கிறார்கள் கூடவே சரித்திரமதிப்புப் பெற்ற திரு தேசிங்கு ராஜனின் கோட்டைகளையும்காட்டுகிறார்கள்.இது போல் சரித்திரப்புகழ் பெற்ற பல இடங்களைக்காட்ட மாணவ மாணவிகளின் மனது விரிவடையும் தேச் வீரர்களைப் பற்றிதெரிந்துக்கொள்ளவும் முடியும் வெறும் ஏட்டுப் படிப்பை விட இது போல்practical knowledge மிகவும் உதவுகிறதுமனதில் ஆணித்தரமாக பதிகிறது ,

No comments: