Saturday, January 24, 2009

பகுள பஞ்சமி

ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும். அன்றையத் தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப்பஞ்ச ரத்ன கீர்த்தனங்களைப் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம்அராதனை,பூஜைகள் நடக்கும் .அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தைஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம்அவ்ர் திருப்பதிகோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் ,.என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்துஇறந்து விட்டான் என்றுத் தெரிய வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி,குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டதுஒரு ஆலயத்திற்குள்சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத்தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில்மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்பாளைத் திற்க்கலாம்என்று எண்ணி உள்ளேகுதித்தான் அவ்வளவுதான் டம் என்றச் சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டான்நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில் தன்கணவன் இவ்வள்வு நாழியகியும் வெளியில் வரவில்லையெ என்று கவலையுடன்அழுது ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி பின் அவனைக்கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.அவன் கழுத்தில் துளசி மாலைஇருந்தது அவன் சிறந்த விஷ்ணு பகதன் என்று தியாகராஜஸ்வாமிக்குத்தெரிந்து,பின் "நா ஜீவோ தாரா என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு அதாவது அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமாஎன்று உள்ளம் உருகிப் பாடினார் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போலஉயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,,,, "ராம நாமம்" ஒரு சிறந்த மந்திரம் இதை எப்போதும் ஜபிக்கலாம்ப்டுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனிவாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே ,,,,,,,,,,,, பொங்கல் நன்நாளுடன் திருவள்ளுவர் தினமும்ஸ்ரீ தியாகபிரும்மத்தின் ஆராதனை தினமும் சேர்ந்து வந்த இந்நாளை மறக்காமல்வழிபடுவோம் விசாலம் ,

No comments: