Saturday, January 24, 2009

தேசிய இளைஞர்கள் தினம்

ஜனவரி 12 ல் ஸ்வாமி விவேகானநதரின் பிறந்த நாள் ,இந்தத் தினம் தேசியஇளைஞர்களின் தினமாகக்கொண்டாடப்படுகிறது ஒரு இளைஞன் தேசப் பற்று ,வீரம் , ஒழுக்கம் மனிதநேயம் நற்பண்புகள் ,தளர்ந்து போகாத நெஞ்சம் ,இலட்சியத்தை நோக்கி வெற்றிப்பாதை வகுத்தல் ,மனோதைரியம் ,பெரியவர்கள் மேல் அன்பு மரியாதை முதலியவைகளைக் கொண்டிருந்தால் அந்தநாடும் முன்னேறும் என்கிறார் சுவாமி விவேகானந்தர் அவர் மேலும் அவர் சொல்வது"நம்பிக்கையே இறைவன் .....தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது இறைவனிடம்நம்பிக்கை இழப்பதாகும் ""தூய்மையும் ஞானமும் நம்மிடமிருந்து வெளியேறும் போதுதான் சமயச்சண்டைகள் மனிதனிடம்ஆரம்பமாகின்றன""பெயர் புகழ் சொர்க்கம் என எதுவொன்றையும் கருதாமல் நன் முயற்சிகளில்ஈடுபடுவார்கள் எல்லாநாடுகளிலும் இருக்கிறார்கள் .தாம் வாழும் மக்களின் நடுவே பயன் கருதாமல்நறுமணத்தைப் பரப்பிக்கொண்டுஇருக்கும் மலர்களைப் போன்றவர்கள் இவர்கள்" அவர் வாழ்க்கையில் ஒரு அனுபவம் ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார் அப்போது சில ஆங்கிலேயர்கள்ஏறினர் விவேகானந்தரின் உடை அவரது முண்டாசு போன்ற கோலத்தைப் பார்த்துசிரித்தனர் ஆங்கிலத்தில் கேலி செய்தனர் எல்லாம் இவரும்கேட்டுக்கொண்டிருந்தார் ,பின் ரயில்நிலைய அதிகாரி வந்தார்அவருடன் சுவாமி சரளமாக ஆங்கிலத்தில் பேசினார் ,பின் ஒரு ஸ்டேஷனின் ரயில் நின்றுவிட்டுக் கிளம்பியதும் அவர்கள் கேட்டனர்'நாங்கள் உங்களைப் பற்றி கேலியாகவும் கிண்டலாகவும் பேசினோமே!நீங்கள் ஏன் ஒன்ரும்கேட்கவில்லை? கோபமும் வரவில்லை?சண்டைக்கும் வரவில்லையே?"அதற்கு அவர் விடையளித்தார்"" நான் முட்டாள்களச் சந்திப்பது இது முதல் தடவையல்ல"அந்த மஹானுக்கு கரம் குவித்து வணங்குகிறேன் ,,அவரது பிறந்த திதி சப்தமிதிதியில் ஹஸ்த நட்சத்திரம்இந்த மாதம் 17ந்தேதி வருகிறது

No comments: