Sunday, January 4, 2009

அவரவர் கண்ணோட்டம்

அவரவர் கண்ணோட்டத்தில் அவன் ஒரு திருடன்
அவன் மயங்கிக் கிடந்தான் . . குடித்துவிழுந்து கிடந்தான் .
பார்த்தான் ஒரு திருடன் ,
"பாவம் திருடிக்களைத்தானோ?
இரவெல்லாம் திருடினானோ?"
எண்ணம் அங்கு வலுத்தது.
மனமும் அதையே நினைததது .
அங்கிருந்து விலகினான்.
வந்தான் ஒரு வலிப்பு நோய்க்காரன் ,
ஒரு நிமிடம் அங்கு நின்றான்
கண்டு வருந்தினான் .
"ஐயோ!பாவம் ,,வலிப்பு வந்து விழுந்தானோ"
எண்ணம் அங்கு வலுத்தது
மனமும் அதையே உணர்ந்தது .
அடுத்து வந்தார் ஒரு உண்மை சாது.
கண்டார் அவனை அவர் நினைப்பில்
,,"சமாதி நிலையில் இருக்கிறானோ?
தொடுவேன் அவன் பாதம்
"எண்ணம் அங்கே வலுத்தது
அதையே செய்ய வைத்தது
அன்புடன் விசாலம்

No comments: