Sunday, June 24, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-11

நான் நினைத்தது நடந்தே விட்டது,ஒரு நிமிடத்திற்க்குள்" தமதம" என்று ஒரு கூட்டம் உள்ளே நுழைந்தது. பலர் அதில் வாசலில் எழுதி இருந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்து விட்டு "டேய் கிஷ்ன்சிங்கா.. வாடா வெளியே நாயே! என்று வாய்க்கு வந்தது எல்லாம் பேசி கத்த ஆரம்பித்தனர். கையில்.. கத்தி கோடாரி இருந்தன. அப்பப்பா இந்த இந்துக்கள் எப்படி இத்தனை வெறியர்களாக மாறினார்கள்? நம்பவே முடியவில்லையே..வாசலில் அவரது சைக்கிள் இருந்தது, தவிர ஒரு பழைய மாடல் காரும் இருந்தது, ஒருவன் பீமன் போல் அலக்காக அந்தச் சைக்கிளைத் தூக்கினான் ஒரு சுற்று சுற்றி கீழே போட்டு காலால் மிதித்தான் எல்லோரும் ஹாய் ஹாய் என்று முழக்கம் இட, ஒருவனது கண்கள் அந்தக் காரின் பக்கம் சென்றது ,நான் மாடியில் சன்னல் வழியாக மறைந்து நின்று பார்த்தேன். மனது பக் பக் என்று இருந்தது ,"கதவைத் திறடா மடையா" பேவ்கூஃப்...புட்டா buddhha
நீசே ஆஜா தூ " என்று ஹிந்தியில் கத்தினர். என் கணவர் பொறுக்க முடியாமல் கீழே போனார் அவர்களிடம் "ஏன் கத்துகிறாய்? இங்கு இருக்கும் சர்தார்ஜி குடும்பத்துடன் ஊர் போய்விட்டனர்"என்றார் "நாங்கள் மதராசி தான் இங்கு இருக்கிறோம் "
ஹரே ஹட ஜா என்று ஒரு தள்ளுத்தள்ளி உள்ளுக்கு வந்துவிட்டனர்
நான் முன்பு ப்ளான் போட்டபடி அந்த பாத்ரூமுக்குள் சர்தார்ஜி அவர் மனைவியுடன் உள்ளே புகுந்துக்கொண்டேன் குழாயை வேகமாகத் திறந்தும் விட்டேன் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டேன் மனது படபட் என்று அடித்துக் கொண்டது. பாத்ரூமில் குளிக்கும் போல் பாவனைச்செய்து நல்ல மைசூர் சாண்டல் சோப்பைக் குழைத்தேன் நல்ல மணம் வீசிற்று... உள்ளூர ஒரு பயம் தான். மனம் துர்கே எனக்கு தைரியம் கொடு! என்று வேண்டியது முருகா இந்தக் குடும்பத்தைக் காப்பாற்று! உத்தர ஸ்வாமி மலையில் வந்து அபிஷேகம் செய்கிறேன் என்று முருகனைக் கூப்பிட்டேன். தமிழ் பாட்டு பாட ஆரம்பித்தேன் அவர்களில் இருவர் பாத்ரூமிற்கு வாசலில் வந்து கதவைத் தட்டினார்கள், நான் "மை ஹூன் ,,,மதராசி ,,,, ,,ஆப் கோன் ஹை? மை தோ நஹா ரஹீ ஹூன் "சலியே ச்லியே" "{ நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் யார்? போங்கள், கீழே... என்றேன். "அச்சா அச்சா " என்று சொல்லியபடி கிழே சென்று விட்டனர். அங்கே போய் "அந்தர் கோயி நஹீன் ஹை,,,"உள்ளே ஒருவரும் இல்லை, என்றனர்
அப்பா... முருகா என் வயிற்றில் பாலை வார்த்தாயே...கண்களில் கண்ணீர் பெருக அந்தச் சர்தாரினியை அணைத்துக்கொண்டேன். வாழ்க்கையில் ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி மனதில் வந்தது. அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, சர்தார்ஜி அப்பாவும் என் தலையைக் கோதிவிட்டு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மிகவும் சின்னக் குரலில் "சத்ஸ்ரீ அகால் " என்று தன் குருவுக்கு நன்றியைத் தெரிவித்தார். நானும் கூடசேர்ந்து கொண்டேன்.
அங்கு மடி பார்க்கும் மாமி வீட்டிலும் அவர்கள் நுழைய அந்த மாமி "போங்கடா கீழே இங்கு நானும் என் மகனும் தான் இருக்கிறோம் "பெரிசா சோதனைப் போட வந்து விட்டாய் என்று தமிழில் சொல்ல அவர்கள் ஒன்றும் விளங்காது சிரித்துக்கொண்டே அந்த ரஜாயின் மேல் அமர்ந்தார்கள். மாமி பிளாஸ்க்கில் இருந்த சாயை அவர்களுக்குக்
கொடுத்து மனதைத் திசைத்திருப்பி பின் கீழே அனுப்பி விட்டாள் என்ன சமயோஜன புத்தி? அவர்கள் போனதும் கதை மூடிவிட்டு ரஜாய்ப் பெட்டியின் கதவைத் திறக்க அதிலிருந்து மகனும் மருமகளும் வெளியே எழுந்து வந்தனர். பாவம் ஒரு மணி நேரம் அந்தப் பெட்டிக்குள்..என்றால் எத்தனைச் சிரம்மாக இருந்திருக்கும் இந்த ஒரு நாள் மட்டும் இல்லை சுமார் பத்து நாட்கள் அவர்களை உள்ளேயே வைத்துக்கொண்டு இட்டிலி காபி சாம்பார் பாத் என்று கொடுத்து உதவினோம் அவர்கள் வீட்டிற்க்குள்ளேயே சிறைப்போல் இருந்தனர்.

வளரும் அன்புடன் விசாலம்

No comments: