Sunday, June 24, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"--14

இந்திரா மரணம் இந்தியா மரணம்

ஒரு சாரரின் சதியினால் இரு சீக்கியர்கள் திருமதி இந்திராஜியைக் கொல்ல ஒப்புத்துக்கொண்டனர், அவர்கள் சர்தார் சத்வன் சிங், சர்தார் பெந்த் சிங் {beant sngh }அதற்காகஅவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர். நம்பர் 1 சர்தர்ஜங் ரோடு நயி தில்லி
திருமதி இந்திராஜியின் வீடு, அவர் வழக்கம் போல் காலை 4 மணி எழுந்து அவரின் நித்ய வேலைகளைக் கவனித்தார். அன்று ஐரிஷ் டி வி,யிலிருந்து ஒரு படம் எடுக்க பிரிட்டிஷ் நடிகர் திரு பீடர் உஸ்தினோவ் என்பருடன் காலையில் பேட்டி ஏற்பாடாகி இருந்தது,
அவர் அதற்காக வெளியில் தோட்டத்தைப் பார்வை இட்டுக்கொண்டு வந்தார். எதிர்பாராத விதமாய் அந்த இரண்டு சர்தார்ஜிகள் அவர் முன்னால் வந்து அவர்
சுதாரித்துக் கொள்வதற்கு முன்பே டுமீல் டுமீல் என்று பல தடவைச் சுட்டு வீழத்தினர். ஒரு கோலியா இரண்டா... 31 கோலிகள் அவர் உடம்பில் பாய்ந்து சல்லடையாக்கியது.அப்படியே கீழே சாய்ந்தார் பலர் ஓடி வந்து இந்த இரண்டு சர்தார்களைப் பிடிககு முன்
அவர்கள் தன்னையே சுட்டுக் கொண்டனர் . ஒருவன் அங்கேயே விழுந்து இறந்தான். ஒருவன் பிழைத்துக் கொண்டான். திருமதி இந்திராஜியின் கடைசி சொற்பொழிவில் பேசியப் பேச்சு மக்கள் காதில் ஒலித்தது. " நான் என் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை நம் நாட்டிற்கு உழைத்தபடி இருப்பேன் என் கடைசித்துளி இரத்தமும் பாரதத்திற்கு அர்ப்பணிப்பேன் " அவரை ஆல் இந்தியா மெடிகல் இன்சிடிட்யூட் அழைத்துச் செல்ல... போகும் வழியிலேயே உயிர் இழந்தார். மங்கீ பிரிகேட் monkey brigade என்ற குழந்தைகளின் சுதந்திர இயக்கத்தின்
தலைவியாக இருந்த சிறுபெண் இந்திரா... அப்போதிலிருந்தே நல்ல மனதைரியமும், மனோதிடமும் கொண்டு செய்கை புரிந்திருக்கிறார். ஒரு தடவை அவளது பள்ளியின் பையில் சில முக்கியமான ஒத்துழையாமை இயக்கத்தின் தாள்கள் இவர் மூலம் வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டது, சிறு பெண்ணாய் இருந்தாலும் நடுவில் வெள்ளையர்களால்
நிறுத்தப்பட்டவுடன் மனம் கலங்காமல் "எனக்கு பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது உடனே போக வேண்டும் என்று ஒரு சலனமும் இல்லாமல் பேசியதும் அவர்கள் இவரை விட்டு விட்டனர், அந்த வீரப் பெண்மணி 31 புல்லட்டுகளால் தாக்கப் பட்டுக் கிடந்தாள் என்றால் என்ன சோகமானக் காட்சி...ஒருவராலும் நம்பமுடியாமல் ஒரேடியாகச் சூறாவளி கிளம்பியது ஊழிக்காலம் போல் தென்பட்டது. எங்கும் நெருப்பு பிண நாற்றம்,வீடுஎரிதல், என்று தொடர்ந்து கொண்டே போக கடைசியில் ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஒரு குடும்பத்தில் ஒருவன் தவறு செய்தால் அந்த ஒருவனுக்கும் அவனைத்தூண்டிவிட்டவனுக்கும் தண்டனை கிடைக்லாம் ஆனால் ஒட்டு மொத்தமாக அந்த வம்சத்தையே அழிக்க வேண்டும் என்ற வெறி ஏன் வந்தது? இது அராஜகச் செயல் அன்றோ? எத்தனைத் தாய்மார்கள் குழந்தைகள் வெந்து மடிந்தனர் எத்தனைக் குழந்தைகள் அநாதையானது? பயத்தில் சிலர் தங்கள் கொள்கையும் மீறி தங்கள் தாடி மீசையை எடுத்துவிட்டனர் தலைப்பாகையும் எடுத்துவிட்டனர் உயிர் பயம் வந்தால் கொள்கையும் காற்றில் போய் விடுகின்றன. எனக்குத் தெரிந்த டாகடர் பான் bhan
ஒரு சர்தார்ஜி, ஒரு மாதம் கழித்து அவரிடம் போனேன் அவர் தான் கதவைத் திறந்தார் நான் அவரிடமே "டாக்டர் பானைப் பார்க்க வேண்டும்"என்றேன். அவர் "நான் தான் பான் விசாலம் பஹ்சான் கரனா முஸ்கில் ஹை க்யா?"{அடையாளம் தெரிவது கஷ்டமாக
உள்ளதா?" } என்றார் ஆம் தாடி இல்லை மீசை இல்லை பகடி இல்லை ?ஒரு ஹிந்து போல் காட்சி அளித்தார்.
கொஞ்சம், கொஞ்சமாக வெறியர்களின் ஆட்டம் அட்ங்கியது பிரதமரின் சவ அடக்கத்தின் நாள் குறிப்பிட்டார்கள். ஊரடக்கம் சட்டமும் வந்தது. அப்பப்பா என்ன ஜன சமுத்திரம்? இந்தியாவே திரண்டு வந்திருந்தது, மக்கள் கதறினார்கள் அந்தக் காட்சி இன்னும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது நவம்பர் மூன்றாம் தேதி ராஜ்காட்டில் அவர் நிரந்திரமாக நித்திரை கொண்டார். பெயர் சக்திஸ்தல் என்று வைக்கப்பட்டது .
அவர் செய்த நல்ல காரியங்கள் கரீபி ஹடாவோ என்ற ஏழ்மையை அகற்று" வெளிநாடுகளுடன் நட்புக்கரம், அணுசக்தியின் பரிசோதனை, ராஜஸ்தானில் போக்ரான் என்ற இடத்தில் சிரிக்கும் புத்தர் laughing budha என்ற பெயரில் நடத்தியது.
நாட்டின் பொருளாதாரம், கௌரவம் உயர்த்தினது, ஐந்தாண்டு திட்டங்கள் செயலானது ஆகியவைகள்.
செய்த தவறு என்று மக்கள் கூறியவை.. எமெர்ஜென்சி கொண்டு வந்தது, பல முக்கியத்தலைவர்களை சிறையில் வைத்தது, ஆபிரேஷன் பிளூ ஸ்டார் என்று சீக்கியரின் புனிதத் தங்கக்கோயிலைத் தாக்கியது, கட்டாய கருத்தடுப்புச் சட்டம் கொணர்ந்தது.

இந்திராவின் மரணம் இந்தியாவின் மரணமாக ஆனது. அவருக்குப்பின் இதுவரை ஒரு சரியான ஆட்சி இதுவரையில் அமையாதது நமது துரதிர்ஷ்டம்தான்.

திரும்ப நாட்டின் நிலைமை ஒரு விதமாகச் சரயானது எங்கள் வீட்டு சர்தார்ஜியின் பேத்தி என் மகனுக்கு இன்றும் ராக்கி கட்டுகிறள், அந்த மடி ஆசார மாமியும் மாறி எங்கள் கட்சியுடன் சேர்ந்து விட்டாள். ஒரே குடும்பம் ஒரே இந்தியன் நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் பாரத சமுதாயம் வாழ்கவே! எல்லா மொழிகளும் இனியவையே!
எம்மதமும் சம்மதமே!
அன்புடன் விசாலம்
**********முற்றும் *********

என் அன்பர் திரு ஜயபரதன் அவர்கள் என் தில்லியின் இந்த அனுபவங்களை எழுத ஊக்கம் கொடுத்து எழுத சொன்னார் அவரால் ஒரு 14 பாகங்கள் எழுதிவிட்டேன் இதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்புடன் விசாலம்
******************************

No comments: