Sunday, June 24, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-12

என்னைக் கவர்ந்த இந்திரா அம்மையார்:

இத்தனை வெறிக்கும் காரணம் யார்? ஏன் அந்த அம்மையாரைச் சுட வேண்டும், அதுவும் ஒரு வாசற்காப்போன், இது தெரிய நாம் திருமதி இந்திரா அம்மையாரின் ஆட்சிக்காலத்திற்கு போகவேண்டும். "இந்திரா" பெயரிலேயே இந்தியா இருப்பது போன்ற பிரமை வீரமும் மனதிடமும் தீரமும் கொண்ட பெண்மணி.. ராஜ வம்சக் களை முகத்தில்...
மேடைப் பேச்சு கடல் மடைத் திறந்த வெள்ளம் போல் அப்படியே கொட்டும் கடைசியில் "ஜய்ஹிந்த்"என்ற முழக்கம் இன்றும் என் காதில் விழுந்து கொண்டிருக்கிறது. மும்முறை அவர் இந்தியாவின் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்று நாட்டை உயர்வடையச் செய்தார்.
அவருக்குத்தான் எத்தனை மனவலிமை! ஒன்று நடத்திக்காட்டுவேன்" என்று சொல்லி விட்டால் எப்படியேனும் அந்தக் காரியத்தை நடத்தி முடிப்பார். 1965ல் முதல் தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஸ்ரீ லால் பஹாதூர் சாஸ்திரியின் திடீர் மரணம் {தாஷ்கெந்த் மீடிங்} நாட்டையே குலுக்கியது அவர் பின் வந்த ஸ்ரீமதி இந்திரா காந்தி மிகுந்த
அனுபவசாலியாக திறமையுடன் செயல் பட ஆரம்பித்தார். அவருக்கு உதவியது அவர் தந்தையாக ஸ்ரீ ஜவஹர்லால்ஜி அமைந்தது, அவருடைய கொள்கைகளைக் கொண்டு தேசபக்தி மிக சிறந்த அறிவாளியாக,
பெரிய இலட்சியவாதியாக, நாட்டை மேலும் வளரச் செய்து உலக நாடுகளில் நம் நாடும் ஒரு முக்கிய பங்கு எடுக்க மிகவும் உதவினார். ஸ்ரீ ஜவஹரின் அறிவுத்திறன் இவரிடமும் பொதிந்து கிடந்தது. சாமர்த்தியமும் மனதைரியமும் எதையும் தாங்கும் சக்தி கிடைத்தது. சைனா போர், பாகிஸ்தான போர் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டி உலக நாடுகளிலேயே போற்றக்கூடிய ஒரு பெண்மணியாகத் திகழ்ந்தார். இதனால் இந்தியாவின் புகழும் கௌரவமும் உயர்ந்தன. இப்படி உயர்த்திவிட்டப் பெருமை அம்மையாரையே சேரும் ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தப்புகளைச் செய்து 1977ல் தோற்கப்பட்டார். அவர் செய்த நல்ல காரியம் சிலருக்கு தவறாகப் பட்டது அதில் குடும்பக் கட்டுப்பாடு முக்கியமான ஒன்று. மக்கள் தொகையைக் குறைக்க
குடும்பக் கட்டுபாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் இரு குழந்தைகள் மேல் இருப்பவர்கள் எல்லோருக்கும் "நஸ்பந்தி" என்ற அறுவைச் சிகிச்சை கட்டாயப் படுத்தப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் கருகலைப்பு சர்வ சாதாரணமாக ஆனது இதனாலும் தவறான செயல்கள் பெருகின. அவசரத்தில்
டாகடர் சரியாக இல்லாமல் தவறான சிகிச்சைசெய்யப்பட்டு பலர் உடல் நலம் குன்றி அவதிப்பட்டனர். ஸெக்ஸ் சர்வ சாதாரணமாகியது, இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

இரண்டாவதாக இவரது கோபம், பிடிவாதக் குணம் இவரைக் கவிழ்த்தது. இவரின் அஹங்காரம், தன் உத்தரவை
எல்லோரும் கேட்க வேண்டும் என்ற கொள்கை எல்லாம். இவரது தோல்விக்கு காரணமாயின.அவரிடம் பல நல்ல அம்சங்கள் இருந்தன, வீர மேடைப்பேச்சு , வெளி நாட்டவர்களிடம் நட்புக்கரம், எத்தனை இடர் வந்தாலும் உடனே பதறாமல் செயலெடுக்கும் திறமை ஐந்தாண்டு திட்டங்கள் வகுத்து நாட்டை ஓங்குதல், பாரதகலாசாரத்தை வளர்த்தல், கலைஞர்களைப்
பாராட்டுதல், மலைச்சாதி மக்களுடன் கூடி இழைதல் நடனம் ஆடுதல் அவ்ர்களுக்கு கல்வி ஆஸ்பத்திரி போன்றவை வழி வகுத்து கொடுத்தல்

போன்ற நல்ல அம்சங்கள் இருந்தும் அவரது சில செயல்களால் தேர்த்தலில் தோற்று போகும் படி ஆயிற்று.
அடுத்த செய்தது சரியா தவறா, என்று சிந்திக்கவைத்த செயல் "ஆபிரேஷன் ப்ளூ ஸ்டார் ' இதை அடுத்த பாகத்தில் காண்போம்...

வளரும்...

அன்புடன் விசாலம்

No comments: