Tuesday, June 26, 2007

ஆதி சங்கரர்

நாடு முழுவதும் சங்கர ஜயந்தி கொண்டாடுகிறார்கள்,அவரது சரித்திரமும் எல்லோருக்கும் தெரியும் அவர் இயற்றிய விவேக சூடாமணி ஒரு இரத்னம் தான், ஆதி சங்கரர் ஸ்ம்ஸ்கிருதத்தில் “பிரச்னோத்திர ரதன மாலா என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறார் ,தமிழில் அது ரதன மணி மாலை என்று சொல்லலாம். அதிலிருந்து சில நாம் இன்று ஞாபகத்திற்கு கொண்டுவரலாம்
எது தீமையில் முடிவது? அகந்தை
எது மகிழ்ச்சியைக் கொடுப்பது? ..நல்லவர்களின் நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது எது? வஞ்சகம்
முயற்சி செய்து பெறுவது எது? கலவி
விலை மதிப்பிட முடியாதது,,எது?,,,,,சமயத்தில் செய்யும் உதவி
துயரங்களை அழிக்க வல்லவர் யார்? அனைத்தையும் துறக்க வல்லவர்
எவைகளை அலட்சியம் செய்யவேண்டும்? தீயோர் பிறர் உடமை மற்றான் மனைவி
உலகை வெல்பவன் யார் ? சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ,,,
பார்வை அற்றவன் யார் ?கற்றபின்னும் தீமைகளிலேயே உழல்பவன் ,,,
செவிடன் யார் ? நல்லவற்றை கேளாதவன் செவிடன்
யார் நண்பன்? தீயச் செயலகளிலிருந்து நம்மைத் தடுப்பவன்
பேச்சுக்கு அழகு தருவது எது ? சத்தியம்
நாம் வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டியது எவை ?நற்சிந்தனை நலொழுக்கம்
மகிழ்ச்சியுடன் ஆற்றும் பணிகள் எவை?நலிந்தோர்பால் இரக்கம் கொள்ளல் ஈதல்
சத்சங்கத்துடன் சேருதல் ,
யார் முன்னால் தெய்வம் பணிந்து நிற்கும் ? ஜீவ காருண்யம் மிக்கவனிடம் தெய்வம் பனிந்து நிற்கும் ,,,,,,,,,

அன்னை ஆர்யாம்பிகை[ பெற்ற ஒளியே
பால சங்கரனாக வந்த மூலசிவமே
துள்ளித் திரியும் பருவத்தில்
கட்டுக்களை அறித்திட்டாய்
வேதாந்த மலைச்சிகரம் ஏறி
நாத பிரும்மத்தைத் தொட்டாய் ,
ஆசை முதலை கவ்வ
“நான் “என்ற முதலை அது
அஹங்காரம் விடச் சொல்ல
நீயும் சத்தியம் செய்ய,,,
முத்லைப் பிடியும் விட
சன்யாசி ஆகி விட்டாயே ,,,
காலடியில் பிறந்தாய்
ஆசார்யர் ஆனாய்
இப்பாரதம் தவம் செய்தது
புண்னிய பூமி ஆனது

அன்புடன் விசாலம்

No comments: