Tuesday, June 26, 2007

மனம் இருந்தால் வழி உண்டு

மனம் இருந்தால் வழி பிறக்கும் ,,மனதில் உறுதி இருந்து சாதிக்க நினைத்தால் எதையும்
செய்ய முடியும் ஒருவர் ,,ஸெல் போனில் பேசுகிறார் கணினியில் அனாயாசமாக
மடல் அனுப்புகிறார் ,கீ போர்டு உபயோகிக்கிறார் ,,வர்ண்ங்கள் பூசி அழகாகச் சித்திரம்
படைக்கிறார்,,,,,,,இன்னும் அவர் செய்வது பல ,,,,இது என்ன இந்தக் காலத்தில் சின்னப்
பாப்பா கூட எல்லாம் செய்கிறது,,என்கிறீர்களா? இங்கு இதைச் செய்பவர் பிறப்பிலேயே
மூளைக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு {cerebral palsy} கைகள் விளங்காமல் உடலும் வளராமல் இருக்கின்றன ,எல்லாம் தன் கால்களினால் செய்கிறார் காலின் கட்டைவிரலால்
கலரின் தூரிகை எடுத்து வர்ணம் பூசுகிறார் அவர் சொல்கிறார் “நான் வாழ்க்கையில் ஒளியைப் பார்க்கிறேன்
எப்போதும் பிரகாசமான ஒளிமயமான எதிர்காலத்தைப்
பார்க்கிறேன் “
நாம் இரண்டு கைகள் கால்கள் இருந்தும் சில சமயம்
நம்பிக்கை இழந்து விடுகிறோம்
இந்தத் தன்நம்பிக்கை உள்ள சிறந்த மனிதர்,,, நரசிம்மலு,,,,
அவர் ஆங்கிலத்தில் கூறியது என்னை மிக கவர்ந்தது
” sucess is not permanent and failure is not the end so keep trying till your victory makes history.
சித்தூரில் பிறந்த இவரை இவர் பெற்றோர் வளர்க்க கஷ்டப்பட்டு ஒரு அநாதாஸ்ரமத்தில் விட்டு விட்டனர்
அப்போது அவ்ருக்கு ஏழு வயது ஆந்தர மகிலா சபை
முதலவர் திருமதி அக்கம்மா கிருஷ்ணமூர்த்தி இவரைப்
பராமரிக்கும் நல்ல வேலையில் ஈடுபட்டு அவருக்கு தினமும் தன்நம்பிக்கை என்ற உண்வை ஊட்டி
பிசியோதரபியில் சேர்த்து ,கால்களுக்கு வலுவு கொடுத்து
எல்லாம் கால்களால் செய்யும் பழக்கத்தை உண்டுபடுத்தி
பின் எழுதுவதும் கால்களால் சொல்லிக் கொடுத்து
தற்போது தன் துணிகளையும் தைத்துக் கொள்கிறார்
அவரை அந்த அன்பு வளர்ப்புத்தாய் ஸ்பாஸ்டிக் சொசைட்டி
அனுப்பிவைத்து நல்ல மன உறுதி இருந்த்தாதால் இவர்
பத்தாவது வகுப்பும் 60% எடுத்து தேறி இருக்கிறார்
கணினியின் கோர்ஸும் முடித்து விட்டார் இவர் கால்களால் வரைந்த சித்திரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன திருமணிரதனம் நடிகர் சூர்யா நடிகர் அஜித் போன்றவர்கள் வந்து பார்த்தனர் எல்லோரும் அவரைப் புகழ்ந்து சென்றனர் ,எல்லாம் கால்களாலேயே
செய்து வாழ்க்கையில எதிர்நீச்சல்போட்டு பெரிய டத்தைப் பிடித்த சாதனையாளருக்கு நான் தலைக்குனிந்து வணங்குகிறேன் 32 வயதான இவர் தன் கால்களில் ஊன்றி
விட்டார் ,,, இந்தச்செய்தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸில்
வந்திருந்தது ,,,,,,,

அன்புடன் விசாலம்

No comments: