Tuesday, June 26, 2007

பட்டம் பறக்குது பார்

கொக்கு பறபற கோழி பறபற மைனா பறபற மயிலே பற “ இநத்ப்பாட்டைக் கேட்டாலே
நமக்கு ஞாபகம் வருவது ஆகாயத்தில் பறக்கும் பட்டங்களும் அதை ஒருவருக்கொருவர் கீழே வெட்டி வீழ்த்தும் செயல்களும் தான் வண்ணப் பட்டங்கள் ஆகாயத்தில் அழகாக
பவனி வருவது கண்கொள்ளாக் காட்சிதான் ,அதுவும் ஒருவர் பட்டம் மேலே பறக்க
மற்றவர் “மாஞ்சா என்று சொல்லப்படும் கண்ணாடித்துகள்கள் தடவிய கயிற்றால்
அதை அறுக்க “;போ காட்டே ” என்று வட இந்தியாவில் எல்லோரும் கூச்சல் போட
பசி தாகம் ஒன்றும் இல்லாதது போல் மணிக்கண்க்காய் இந்த விளையாட்டில் ஈடுபட்டு
களிப்பார்கள் .சிலர் இதில் பணம் கட்டுவது உண்டு ,,,
ஆனால் இதே விளையாட்டு வினையாகவும் ஆகிறது பல சேதங்களும் ஏற்பட்டிருகின்றன
மொட்டைமாடியில் தண்ணீர் டேங்கின் மேல் நின்று ஒருவன் பட்டம் விட கால் வழுக்கி
கீழே விழுந்து விட்டான் ,பட்டம் அறுந்தது உயிரும் பிரிந்தது ,,,,சில குழந்தைகள் பட்டம்
அறுந்து விழும் போது கண்மண் தெரியாமல் ஓடி அதைப் பிடிக்க முயல்வார்கள்,
அப்போது அவர்கள் கவனம் முழுவதும் ஆகாயத்திலிருந்து விழும் பட்டதிலேயே இருக்க ,,,,,நடப்பது என்ன?
விபத்து தான் ,,கார் இவர்கள் மேல் மோதி ,,,,,நேரே ஆஸ்பத்திரி தான்
சிலசம்யம் அந்தக் கண்ணாடிதூள்கள் தடவிய கயிறு சதையை அறுத்தும் விடுகிறது
சமீபத்த்தில் சென்னையில் வண்ணாரப்பேட்டையில் நடந்த சம்பவம் ,,அந்த இடத்தில் நிறைய மார்வாடிகள் வசிக்கின்றனர் ,பாபு என்ற துணி வியாபாரி அயன்புரத்தில் இருக்கும் உறவினரைப் பார்க்க கிளம்பினான் ,அவன் அன்பு செல்லம் இரண்டுவயது
சசாங் “,,,,,,,,,,,,,,,,தான் தனியாகப் போகாமல் அவனையும் அணைத்து எடுத்துக்கொண்டு
இருசக்கிர வாகனத்தில் கிளம்ப ,,”அதோ பட்டம் பார் என் செல்லக் கண்ணா”
என்று ஓட்டிக்கொண்டே காட்ட அந்தப் பாப்பாவும் கழுத்தத நீட்டிப் பார்க்க வந்ததே ஒரு
“மாஞ்சா ” கயிறு ,,,அறுத்தது அதன் பிஞ்சு கழுத்தை ,,,,,இரத்தம் பீரித்து கொட்ட தந்தை
செய்வத அறியாது ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டான் ,பின் எக்மோர் சைல்ட்
ஹாஸ்பிடலில் சேர்க்க சசாங்கின் உயிரும் பிரிந்து விட்டது ,,வண்ணாரப்பேட்டை
முழுவதும் அன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது தந்தை அந்த ஷாக்கிலிருந்து
இன்னும் விடுபடவில்லை ,,,, தானே தன் குழந்த்தைக்கு யமனாகி விட்டோமே என்று புலம்புகிறான் இதுதான் விதியோ ?பட்டத்தின் கயிறு யமனின் பாசக்கயிறோ ?

அன்புடன் விசாலம்

No comments: