Tuesday, June 26, 2007

இரட்டைப்புலவர்

இளஞ்சூரியர் முதுசூரியர் என்று இரு புலவர்கள் 17ம் நூற்றாண்டில் இருந்தனர் ,,ஒருவருக்கு கண் தெரியாது ,,பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர் ,மற்ரொருவர் நடக்க இயலாது
கால்களை இழந்தவர் ,ஆகையால் கண்தெரியாதவர் கால் ஊனமுற்றவரைத் தன் தோளில்
தூக்கிச்செல்வார் ., ப்ல தீர்த்த யாத்திரைகள் செய்து பல கோவில்களுக்கும் போகும் போது
ஒருவர் இருவரிகள் கவிதைப் பாட மற்றவர் பின் இருவரிகள் பாடி முடிப்பாராம்,
இவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்த ஆமிலந்துறை என்ற ஊரில் பிறந்து வாழ்ந்தவர்கள்.
இவர்களை எல்லோரும் “இரட்டைப் புலவர் என்று அழைத்தனர் ,இவர்கள்
எழுதிய ஒரு கவிதை “தில்லைக் க்லம்பகம் “
“தென் புலியூர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலியொன் றென்நாளும் மேவுங்காண் அம்மானை
வெம்புலியொன் றென்நாளும் மேவுமே யாமாகில்
அம்பலத்தை விட்டே அகலாதோ அம்மானை !
ஆட்டைவிட்டு வேன்கை அகலுமோ அம்மானை ‘
இதில் வேம்புலி என்பர் ஸ்ரீ வியாக்கிர பாதர் என்ற சித்தர் ,,அவர் சிவபெருமானிடம் தன்னையே
அர்ப்பணித்திருந்தார் சிவ பூஜைக்கு நல்ல அழுக்கு இல்லாத மலராகப் பறிக்க வேண்டும் என்று எண்ணி இவர் கடும் தவம் இருந்து சிவனிடமிருந்து வரனும் பெற்றார்,அதில் த்ன் நகங்களில் கண்களையும் பின் மரம்
வழுக்காமல் ஏற புலிப் பாதங்கள் போன்ற கால்களையும்
கேட்டு கிடைத்தவுடன் அகமகிழ்ந்தார் ,த்ன் சிவனுக்கு தினமும் மரம் ஏறி நல்ல மலர்களைப் பரித்து அர்ச்சிப்பார்
இவரை எல்லோரும் “புலிக்கால் முனிவர் “என்பார்கள்,
சிதமபரத்தில் அந்தக் காலைத் தூக்கி நின்றாடும் நடராஜரை விட்டுப் போக மனமில்லாமல் தினமும்
அங்கேயே தங்குவாராம் ,பின் ஒரு நாள் நடராஜர் .பதஞ்சலியுடன் நடனம் ஆடுவதையும்
கண்டு களித்தாராம் வியாக்கிரபாதர் ,,,
இவரைப் பற்றித்தான் இந்த இரட்டைப் புலவர்கள்
பாடி இருக்கின்றனர் ,,,,,,

அன்புடன் விசாலம்

No comments: