Sunday, June 24, 2007

"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-13

இப்போது இன்னொரு முக்கியமான சம்பவம் நடந்தைப் பார்ப்போம், இதில் சம்பந்தப்பட்டது நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராஜி இநதக் காரியம் செய்தது தப்பா? அல்லது சரியா?இப்படித்தான் செயய வேண்டும் ,,என்று ஒரு சாரார்,,,இதை எப்படி செய்ய முடியும்?
என்று இன்னொரு சாரார், சிலர் இந்தச் சம்பவத்தினால் மனம் கொதித்தனர், அவர் செய்தது தவறு என்று அடித்துச் சொன்னார்கள். இதைப்பற்றித் தெரிந்துக் கொள்ள நாம் சுமார் இருபது வருடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும். ஒரு நாள்... ஒரு திடுக்கிடும் சம்பவம்... நடந்த இடம் பஞ்சாப். ஒரு திருமணப்பந்தல் அழகாக அலங்கரிக்கப்பட
அதில் ஆயிரமாயிரம் கனவுகளுடன் மணமகன் மணமகள் அமர்ந்திருக்க திடீரென்று தபதப என்ற ஒரு கூட்டம் துப்பாக்கியுடன் நுழைந்தது, என்னவென்று யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல் டப்டப என்று எல்லோரையும் சுட்டு வீழ்த்தியது பின் ஓடிப் போனது, மணப்பந்தல் சோகப்பந்தல் ஆனது, பூக்கள் சிதறிக்கிடந்தன, இரத்தம் ஆறுபோல் ஓடின மணமகன் மேல் மணமகள் உயிரில்லாமல்.. கையைப்பிடித்தபடி இறந்து கிடந்தாள். இந்தச் சோகக்காட்சி நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டது. எல்லோருக்கும் ஒரேஅதிர்ச்சி! அவர்களப்பற்றி விஜாரித்ததில் சில சர்தார்ஜியின் கூட்டம் தங்களுக்கு காலிஸ்தான் என்றத் தனி பிரிவு வேண்டும் என்றும் அவர்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள் என்றும் தெரிய வந்தது இதில் ஆயுதங்கள் கொடுத்து உதவுவது பாகிஸ்தான் என்றும் தெரியவந்தது ஆனாலும் அரசியல்வாதிகள் இதில் தலையிடாமல் ஒதுங்கி நின்றது வியப்புத்தான். அன்று ஆரம்பித்த இந்த அரஜகம் தொடர்ந்து நடந்த்து கொண்டே வந்தது. இதில் பங்கேற்றிருந்தச் சிலர்... அரசியல்வாதிகளுக்கும் சிம்ம ஸ்வப்பனமாக இருந்த்தார்கள். 1983ல் திரும்பவும் பஞ்சாபில் நிறையக் கொலைகள்
நிகழ ஆரம்பித்தன. 1984ல் கணிசமாகக் கொலையின் எண்ணிக்கை ஏறியது. ஒரு பஸ்ஸில் பிரயாணித்த யாவரும் கொலை செய்யப்பட்டனர். அதில் குழந்தைகளும் பெண்மணிகளும் இருந்தனர். நிலைமை மிகவும் முற்றிப்போயிற்று, பல பஸ்கள் எரிக்கப்பட்டன. அந்த நேரம்தான் பசுமைப்புரட்சி green revolution செயற்பட ஆரம்பித்தநேரம்
இங்குப் பசுமைக்குபதிலாக இரத்தப்புரட்சி தான் எங்கும் தெரிந்தது. இதெற்கெல்லாம் காரணம் ஒரு சீக்கிய மதகுருதான் பெயர் ஜமால்சிங்

பிந்த்ரேவாலா, அவர் மதகுருவாக இருந்ததால் ஒருவருக்கும் அவர்
மேல் சந்தேகம் வரவில்லை, புனிதசீக்கியக் கோவில் அமிருத்சரசில், இருந்தது அதைத் தங்கக்கோவில் என்றும் சொல்வார்கள், இந்தப் பிந்த்ரேவாலாஜி நிறைய ஆயுதங்களை வெடிகள், பாம்கள் எல்லாம் அங்கு மறைத்து வைத்திருந்தார்.தொண்டர்கள் மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டனர். யாராவது பிடிபட்டால் சயனைட் உதவியினால் உயிரை மாய்த்துக் கொண்டனர். அத்தனை விசுவாசம் கொஞ்சம் கொஞ்சமாகப் பல விஷயங்கள் அம்பலமாயின. இது திருமதி. இந்திராஜியின் காதிலும் விழ சீறிக் கிளம்பினாள் அன்னை, நாடு இதுபோல் அவதியாவது பொறுக்க முடியாமல் இதற்குத் தீர்வு காண அல்லும் பகலும் யோசித்து பஞ்சாப் தங்கக் கோவிலை முற்றுகை இட கட்டளை இட்டாள். " ஆபிரேஷன் பிளூ ஸ்டார் "என்ற பெயரில் மேஜர் ஜனரல் குல்தீப் சிங் பிரார் என்றவரின் தலைமையில் 1984ல்
சீக்கியரின் தங்கக் கோயில் முற்றுகைஇடப்பட்டது பல கமெண்டோஸ்கள் அனுப்பப்பட்டனர் பல நாடகள் சணடை தொடர்ந்தன அமிருத்தசரஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டன மற்ற நாடுகளிலிருந்து முழுவதுமாக

தனித்து விடப்பட்டது. செய்தித்தாளோ டிவியோ ஒன்றும் இல்லை, என்ன நடக்கிறது என்றே தெரியாமல்இருள் சூழ்ந்து கொண்டிருந்தது . ஐந்து மாதங்கள் முடிய யுத்தம் முடிந்து பிந்த்ரேவாலாஜி பிடிபட்டார். கோவிலுக்குள் ஒரு பாதக்மோ ஒரு வித சேதமோ வரவில்லை, ஆனாலும் சீக்கியர்கள் மனம் கொதித்தனர் அகால் தக்த் என்ற இடம் சிறிது சேதமானது கோவிலுக்குள்ளிருந்து பல வித ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. முடிவு என்ன வென்றால் ஒரு கட்சியின் மனக்கசப்பை திருமதி இந்திராஜி பெற்றுக் கொண்டார். சர்தார் குஷன் சிங் "{ illistrated weekly editor} தமக்குக் கிடைத்த பத்மபூஷண் பட்டத்தை நிராகரித்தார். சர்தார் அமிருதசிங் வேலைவிட்டு நீங்கினார் எரோப்ளேன் ஹைஜேக் ஆனது திருமதி இந்திராஜீயைக் கொல்ல சதித்திட்டம் தொடங்கியது...

..........வளரும்
அன்புடன் விசாலம்

No comments: