Tuesday, June 26, 2007

தந்தையின் தினம

தந்தையின் தினமாக ஜூன் 17 கொண்டாடப்படுகிறது சில விஷயங்களில் தாய் ஒப்புத்துக்
கொள்ள யோசிப்பாள் ஆனால் தந்தையின் ஒப்புதல் கிடைத்துவிடும் ,அதுவும்
மகளுக்கு தந்தை மேல் அதிகப்பாசம் அன்பும் இருக்கும் இதேப்போல் மகனுக்கு
தாயின் மேல் இருக்கும் இது மனோவிக்ஞானத்தில் இருக்கும் உணமை ,,நான் ஒருதடவை
வஜ்ரேச்வரி என்ற சூடு ஊற்று {hotsprings} லோனாவாலா அருகில் என்று நினைக்கிறேன்
போக என் பள்ளியில் அழைத்துப் போனார்கள்,நானும் போக அம்மாவிடம் கேட்டேன் ,
ஊஹும் ,,,,,இரவு தங்க அனுமதி இல்லை ,சொப்பனம் கூட காணாதே என்று
சொல்லிவிட்டாள்,எனக்கு இதைப்பற்றி யோசித்து துக்கம் கூட வரவில்லை ,,மெள்ள என் அப்பாவிடம் போனேன் ,நிறைய ஐஸ் வைத்தேன்,,என் தந்தைப்
புரிந்துக்கொண்டு ஐஸ் எல்லாம் வேண்டாம் ,,உனக்கு என்ன வேண்டும் ,,என்றார் ,நான் விஷயத்தைச் சொன்னேன் ,,அவ்வளவுதான் மாலை நேரத்திற்குள்
எனக்கு அங்கு போக அனுமதி அம்மாவிடமிருந்து கிடைத்து
விட்டது ,அப்பா என்றால் அப்பாதான்,,இந்த நாளில் இது என்க்கு ஞாபகம் வருகிறது ,,,
அப்பா,,உனக்குத்தான்
என் மேல் எத்தனைப் பாசம்!
ஒருநாள்,
என் ஆசையைத்
தாயிடம் சொன்னேன் ,,
தடையிட்டாள்,,
ஆனால் நீயோ
தடையை உடைத்தாய்
என் மகிழ்ச்சிதான்
உன் மகிழ்ச்சி
கன்னிகாதானம் நாள்
என்னை நீ தாரை வார்க்க,
என் கண்களில் நீர் முட்ட
உன்னைப் பார்த்தேன்
உன் கலங்கினக் கண்கள்
இன்னும் என் நினைவில்
உன் ஊக்கமே
என் ஆக்கம்
பலபரிசுகளில்
அடைந்தப்பெருமை,
உன் அணைப்பில் தெரிந்ததே
என் உணர்வுக்கு மதிப்பு
அன்புத்தந்தையே
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன் ,,,,

அன்புடன் விசாலம்

No comments: