Tuesday, June 26, 2007

வதந்தி……

வதந்தி ,,,,,
என் பெயர் வத்ந்தி ,
என்னுள்ளே ஒரு தீ.
ஒரு சிறு பொறி போதும் ,
உடனே ப்ற்றிக் கொள்வேன் ,
பல இடங்களில் பரவி விடுவேன் ,
எல்லைத்தாண்டியும் போய் விடுவேன் ,
காது மூக்கு வைத்துத் திரிப்பதில்,
எனக்கு நிகர் நானேதான் ,
நல்லெண்ணத்துடன் ஒரு பெண் ,
கூட ஒரு ஆண் ,
பார்த்தால் போதும் என்க்கு,
பெண்ணைக் காதலி ஆக்கிவிடுவேன் ,
வரம்பு மீறிப் பேசி விடுவேன் ,
எதையும் தலைக்கீழாய் மாற்ற முடியும் .
என்னால் எதையும் திரிக்க முடியும்
ஆஸ்பத்திரியில் தலைவர்
இறந்தும் விடுவார் ,
பின் பிழைத்தும் விடுவார் ,
ஒரு சவரன் கொள்ளைப் போனால்
ஐம்பது சவரன் ஆக்கி விடுவேன் ,
பிள்ளையார் பால் குடித்தது
உலகம் முழுவதும் பரவியது,
என்னை நம்பாதே ஒரு போதும்
உங்கள் கண்ணை ந்ம்புங்கள் எப்போதும் ,
தெரிந்ததா இப்போது என் சக்தி,
கொடுங்கள் எனக்கு ஒரு முக்தி

அன்புடன் விசாலம்

No comments: