Monday, September 3, 2007

லிம்காவில் ரிகார்ட்

அப்பப்பா ,,,இந்த விக்ஞானத்தின் முன்னேற்றம் தான் என்ன ?மிகவும் அதிக அளவு நம் நாடு அதுவும் தமிழ்நாடு முன்னேறி விட்டது என்பது மிகப் பெருமையாக இருக்கிறது ,என்
பெருமையுடன் திரு அலகப்பன் பிருந்தா தம்பதியர் மிகப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும்
காணுகின்றனர் ,அந்த பிருந்தாவிற்கு வயது 55 ஆகிறது, பல காலம் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்து பின் அவருக்கு மாதவிலக்கும் நின்ற பின்னரும் கடவுள் போல்
ஜயராணி காமராஜ் வந்தார் ,பெண்ணின் கர்ப்பப்பை நல்ல ஆரோக்கியமாக இருப்பதைக்
குறிப்பிட்டு பின் ICSI process மூலம் சினை முட்டைக்களைச் செலுத்தி வெற்றி கண்டிருக்கிறார்,ஒரு குழந்தைக்குப்பதில் போனஸ்போல் இரட்டைக்குழந்தைப் பிறந்துள்ளன,
திருமதி பிருந்தாவிற்கு சர்க்கரை நோயும் ஹைபர் டென்சனும் இருந்தும் அதெல்லாம் இல்லாத சமயம் பார்த்து ஊசி மூலம் கருத்தரிக்க உதவி இருக்கிறர் அந்த டாக்டர் ஜெயராணி
28 வருடம் பிறகு மகவுகளை ஈன்ற முதல் பெண்மணி லிம்கா ரிகார்டுல் வந்து விட்டார்
ஒரு வங்கியில் வேலைச் செய்த பிருந்தா கொஞ்சம் மாதம் முன் தான் வேலையிலிருந்து
விலகினாள்{voluntary retirement} இனி குழந்தைகளைக் கொஞ்சவே நேரம் சரியாக இருக்கும்
பல வருடங்கள் தவ்ம் இருந்து பெற்ற மகன்கள், திருமதி பிருந்தாவிற்கும்
அவர் கணவருக்கும் என் வாழ்த்துக்கள் அத்துடன் அந்த டாக்டரம்மாவிற்கு என் பராட்டுக்கள்
அன்புடன் விசாலம்
,,,,

No comments: