Friday, September 7, 2007

காயத்ரி மந்திரம்

கம்பீரமாக உள்ளே நுழைகிறார் அவர்,,காவி கலரில் உடை , கழுத்தில் உத்திராட்ச மாலை ஆட
ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒலிக்க தொடர்ந்து அந்த இடம் புனித கங்கை நீரால் தெளித்து
சுத்தம் செய்ய அந்த இடமே தூய்மையானது ,,இதில் என்ன வியப்பு? ஆம் மிகவும்
வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இது நடந்தது அமெரிக்காவில் ,,,,ஜூலை 13
வெள்ளிக்கிழமை சரித்திரத்திலேயே முதல் தடவையாக நடந்த சம்பவம் இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைத்தரும் விஷயம் யூ எஸ் சனேட்டில் ஓம் என்ற ஒலியுடன் ஆரம்பித்து பின் காயத்திரி மந்திரமும் ,,,அதைத் தொடர்ந்து அருமையாக வந்தது,
இதுக்கெல்லாம் யார் காரணம் ?ஒரு அமெரிக்க இந்தியன் திரு ராஜன் ஜெட் {Reno Naveda}
1789 க்கு பிறகு இதுதான் முதல் தடவையாக ஒரு ஹிந்து பிரார்த்தனை நடந்தது ,ஸனேடர்
திர்ரு ராபர்ட் கெஸே {Perilvania } செட்டை {Zedஐ} அறிமுகப்படுத்தினார் ,பின் ஹேர்ரி என்பவர் ஹிந்து பிரார்த்தனைக்கு நன்றியைத் தெரிவித்தார் அவர் திரு காந்திஜியின் பகதர்
என்றும் கூறினார் காயத்திரி மந்திரம் வரும் போது ஒரு சிலர் ரகளைச் செய்ய முற்பட்டன்ராம்
ஆனால் அவர்களைப் பாதுக்காப்பாளர்கள் அப்புறப்படுத்தி விட்டனராம் திரு zed தன்
பிரர்த்தனையில் தைத்ரீய உபநிஷத் பின் பிரஹதாரண்யக உபநிஷத் பின் பகவத் கீதையின்
மூன்றாம் அத்தியாயம் படித்து பின் நாட்டு சேவை மக்களின் சேவை எப்போதும்
மனதில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் ,அவர் மேல் இருந்த அங்கவஸ்திரம் மஞ்சள்
சிவப்பு கலந்தக் கலரில் " ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" என்று எழுதியிருந்தது ,,,

ஆஹா நான் இதை ந்யூஸ் பேபரில் படித்த போது மிகவும் பெருமை அடைந்தேன் ,,,,
வாழ்க பாரத்ததின் கலாச்சாரம்


அன்புடன் விசாலம்

No comments: