Friday, September 7, 2007

கோவத்தின் முடிவு

கோபம் எத்தனை ஆபத்தானது .அது வந்தால் உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது நரம்புகள் புடைத்துக் கொள்கின்றன .கண்கள் சிவக்கின்றன,மூளையில் சிந்திக்கும் சக்தியும் குறைகிறது என்ன செய்கிறோம் என்று புரியாத நிலை ஏற்படுகிறது ,நரம்புகள் புடைத்துக் கொள்கின்றன ,இத்தனையும் சேர இரசாயன மாற்றம்
ஏற்பட்டு உடல் நோய் மிக எளிதாக வந்துவிடுகிறது ,மனமும் உடலும் ஒன்றுகொன்று பின்னியுள்ளது
மனம் நன்றாக இருந்தால் தானே உடலும் நலமாக இருக்கும் .
ஒரு உண்மைச் சம்பவம் பார்க்கலாம் ,,,,,,,,

மஞ்சுநாத் என்ற பையன் தன் பென்சிலைக் காணாமல் தேடினான் ,அவனுக்கு பத்து வயது ,அவன் நண்பர்களின்
வயது பன்னிரண்டு..அவர்கள் கோவிந்தச்செட்டிப் பாளையத்தில் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர் அவர்கள்
பெற்றோர்கள் தினக்கூலி செய்து சம்பாதித்து வந்தனர் .அவர்கள் இருந்த இடம் பார்ப்பானா அக்கிரஹாரம்
மஞ்சுநாத தன் பென்சிலைத் தன் நண்பன் எடுத்திருக்கலாம் என்று சந்தேகித்து அவனிடம் திருப்பித்தரும்படி கேட்டான் .அவன் தான் எடுக்கவில்லை என்று சொல்லியும் நம்பாமல் இருந்ததால் அடிதடியில்
ஆரம்பித்தது .இது லன்ச் நேரத்தில் நடந்தது .பின் பள்ளி முடிந்ததும்
திரும்பவும் இந்தச் சண்டை சூடு பிடித்தது ஒரு மாணவன் தரையில் நிறைய தண்ணீர் ஊற்றினான் ,அதில் வழுக்கி மஞ்சு நாத் கீழே விழுந்தான்
இதில் மஞ்சுநாத்தின் கோபம் அதிகமாகியது அதற்குள் மற்றொரு மாணவன்
தன் நண்பனுடன் சேர்ந்து கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் wire எடுத்து
மஞ்சுநாத்தின் கழுத்தில் மாட்டி இழுக்க அவன் மூச்சு முட்டித் திணறி
கண்கள் பிதுங்க கீழே மயங்கி விழுந்தான் இறந்தும் போனான் .மஞ்சுநாத்தின்
சகோதரன் இதைப் பர்த்து ஓடி தன் சகோதரனைக் காப்பாற்ற முயன்று வீடு
தூக்கிச் செல்ல ஒன்றும் பலனில்லை ,,அவன் கழுத்தை நெருக்கினவன்
"நான் என்ன செய்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை எனக்கு ரொம்ப
கோவம் வந்தது அதுதான் எனக்குத் தெரியும் என்கிறான் போலீஸ் அவனை
304 not to intention to kill என்ற பிரிவில் எழுதி observation home க்கு அனுப்பி வைத்திருக்கிறது ........

அன்புடன் விசாலம்

No comments: