Thursday, September 6, 2007

நான் அப்பாவானேன்

பல வருடங்கள் எதிர்ப்பார்ப்பு ,
பின் ஒன்பது மாதம் பாரம் சுமப்பு ,
இன்று அவள் வலியில் துடிப்பு,
என் மார்ப்பு "படபட"வென்றடிப்பு
ஆஸ்பத்திரி அறையில் அவள்,
மாமியார் மெச்சும் மறுமகள்,
என் மனம் குவிய
வேதனை என்னைக் கவிய
வேண்டாத எண்ணங்கள் ஓட
மனமும் ஊஞ்சலாக ஆட ,
எங்கும் பரபரப்பு
உள்ளத்தில் ஒரு சலசலப்பு
நர்சுகளின் ஓட்டம்
மேலும் கொடுத்தது வாட்டம்
டாக்டர்கள் உள்ளே வெளியே நடக்க
ஓவ்வொரு நிமிடமும் யுகமாய்க் கடக்க
இதுவரை நினையாத கடவுள்
இன்று ஏனோ என் முன் ,,,,,
கைக்கூப்பி வேண்டியது உள்ளம்
அதோ கேட்குது "குவகுவா "சத்தம்
பிரார்த்தனைப் பலித்தது தொழுவேன் நித்தம் ,
அவள் வலியில் துடித்தது என் இதயம்
என் செல்ல மகள் பூமியில் உதயம் ,
மறு ஜனமம் எடுத்த என் அன்பு மனைவி
அவளே என் வாழ்க்கைத் த்லைவி


அன்புடன் விசாலம்

No comments: