Friday, September 7, 2007

நானும் ஒரு பெண்

உன் "கலகல" வென்ற சிரிப்பில் .,
புதுப்புது பூக்கள் உதிரும் ,
உன் மென்மை இதழ்கள் என்னுடன் சேர ,
தேனும் அமுது போல் சுரப்பது ஏன் ?
உன் கைகள் என்னுடன் பின்ன,
ஒரு வெப்ப அலை ஓடுவதென்ன?
என் தோளும் உன் தோளும் உரச ,
உன் கண்களில் ஒரு ஒளி பிறப்பதேன்?

அலைப்போல் கூந்தலை நானும் வருட ,
நீ அலைகளைப் பார்த்து ரசிப்பதேன் ?
வானத்திலே ஊர்ந்துச் செல்லும்
நிலவுப் போல நீ மிதப்பதேன் ?
முரட்டுக்கையால் உன்னைப்பிடிக்க
அதிலும் இன்பம் காண்பதேன் ?
என் தொடுதல் உனக்குப் பிடித்தும்
பிடிகாத பாவனை செய்வது ஏன்?
போதை ஏறி நம் கைகள் அழுந்த,
அலைஅலையாய் உணர்ச்சி பெருகுவதேன்?
சிவந்த உடையில் தேவதையாய் நீ
என்னை மோகினிப் போல் கவர்ந்தது ஏன்?
ஒருமித்த மனதின் காதல் விளையாட்டு
அதிலேயே இன்பம் காண்பதேன்?
குளிர்ந்த நிலவுப்போல் வந்தாய் நீ
வெப்பம் ஏறி வெட்கப் படுவது ஏன்?
"எய்ட்ஸ்"நோய் என்று தெரிந்தும் ,
உன் வாழ்வைப் பயணம் வைத்ததேன் ?
நிலவும் உன்னை ரசிப்பதேன் ?
கடலலையும் உன் பாதம் தொடுவதேன்?

No comments: