நாம் தாயின் தன் மக்கள் மீது வைத்திருக்கும் பாசம் பற்றி நிறைய உணர்ந்திருக்கிறோம்
ஆனால் ஒரு தந்தை தன் மகனின் மீது வைத்தப் பாசம் ,,,,,?ஆம் மகன் உடல் நிலை சரியில்லாமல் போக,,,, பல வைத்தியர்கள் வரவழைக்கப் பட்டார்கள்..,அவனுக்கு
வைத்தியம் செய்தார்கள் ,,தந்தை மிகவும் தவித்தார் ,,,ஆனாலும் ஒன்றும் பலனில்லமல்
போக அந்தத் தந்தை துடிதுடித்துப் போனார் ,,,ஆசை மகன் பிழைப்பானா ?.அன்பு மகனை
உயிருடன் பார்ப்பேனா என்றெல்லாம் வருந்தி என்ன செய்வது என்று குறுக்கும்நெடுக்குமாக
நடக்கக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் வைத்தியர்களை எல்லாம் போகச் சொல்லிவிட்டு தன் மகன் படுக்கையின் அருகில் முழங்காலிட்டு முகம் குனிந்து
விழுந்து ஒ அல்லா மாலிக் என்று அழுதார்,, அல்லாவை அழைத்தார் ,"அல்லா
எனக்கு அந்த நோய் வரட்டும் என் மகனை எனக்கு திரும்பக் கொடு உனக்கு ஒரு உயிர்தான் வேண்டும் என்றால் என் உயிரை எடுத்துக்கொள்..என் மகனுக்குப் பதிலாக்
நான் வரத் தயாராக இருக்கிறேன் அவன் வாழட்டும் என்று பிரார்த்தனை மனம் உருகிச்
செய்தார் ,சில நாட்களில் அந்தத் தந்தை முகலாய மன்னர் பாபர் நோய்வாய்ப் பட்டார்.
படுத்தப் படுக்கையானார் பின் இறந்தும் போனார் ,,அந்த மகன் ஹுமாயூன் ,,,,,,
அவர் இறந்ததும் அவரைக் காபூலுக்கு எடுத்துச் சென்று அவர் வேண்டுகோளின்படி
அந்த இடத்தில் புதைத்தார்கள் அங்கே இன்றும் பாபரின் சமாதி இருக்கிறது
அன்புடன் விசாலம்
Friday, September 7, 2007
தந்தையின் பாசம்
Posted by Meerambikai at 3:20 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment