Friday, September 7, 2007

சுதந்திர நாள்

அன்பு குழந்தைகளே , ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் இல்லையா?,,,ஆஹா கையில்
வண்ண வண்ண பலூன்களுடன் சின்ன மூவர்ணக் கொடியுடன் ,மகிழ்ச்சியுடன் வலம் வருவதை
நான் பார்க்கிறேன் ,தவிர பட்டங்கள் ஆகாயத்திலும் பல பறக்கும் அதை ஒருவர்க்கொருவர்
வெட்டிவிட்டு உத்சாகத்துடன் மகிழ்வதும் கற்பனைச் செய்கிறேன் சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும் ஆனால் அந்தச் சுதந்திரம் வரம்பை மீறாமல் இருக்க வேண்டும்
"என்க்கு சுதந்திரம் உண்டு அதனால் வாழைப்பழத்தோலை எங்கு வேண்டுமானாலும் போடுவேன்" என்றோ ,பேச்சு சுதந்திரம் உண்டு என்று எல்லோரிடமும் எப்படி வேண்டுமானாலும் பேசமுடியுமா?எல்லாவிததிலும் ஒரு கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்க வேண்டும்
அதுதான் உண்மையான சுதந்திரம் ,இந்தத் சுதந்திர தினத்தன்று "ஹையா ஒரு நாள் பள்ளி
லீவு ,,கொட்டம் அடிக்கலாம் என்று இல்லாமல் சுதந்திரம் வாங்கித் தந்தத் தலைவர்கள்
பற்றியும் தேசத் தொண்டர்கள் பற்றியும் படிக்கலாம் அல்லது பெற்றோரைக் கேட்டுத்
தெரிந்துக் கொள்ளலாம் , ஒரு ,நல்ல விதமாகப் பொழுது போக்க வேண்டும் , பெற்றோர்களுக்கு
முடிந்த உதவியைச் செய்யலாமே ,,,கப்பல் ஓட்டியத் தமிழன் ,,கட்டப் பொம்மன் போன்ற படங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து பார்க்கலாம் ,அவரிடம் சந்தேகங்களையும் கேட்கலாம்
படங்கள் வரையும் ஆர்வம் இருந்தால் மூவர்ணக் கொடி வரைந்து நண்பர்களுக்குக்
கொடுக்கலாம் ,,,பட்டம் வீட்டிலேயே த்யார் செய்யலாம் ,,,,என்ன குழந்தைகளே ரெடியா ,,,,,

அன்புடன் அம்மம்மா

No comments: