Friday, September 7, 2007

ஸ்ரீ அர்விந்த மஹரிஷி

ஆகஸ்டு 15 என்னும் போது என் மனம் உடனே சுதந்திர இந்தியாவுடன் மகரிஷி
ஸ்ரீ அரவிந்தரிடம் செல்கிறது ,கீதையின் நாயகன் ஸ்ரீ கிருஷ்ணரை அலிப்பூர் சிறையில்
கண்டுக் களித்தார் அவர் .. ஆகஸ்டு 15ல் அவர் அவதரித்த தினம் வருகிறது ,அவரின்
அருளைப் பெறுவோம் ,,,,,,,,,, அவர் அருளைப் பற்றி கூறியது ,,

அருள் என்பது ஒருவர் கண்டு பிடிப்பு அல்ல ஆன்மீக அனுபவத்தின் வாஸ்துவமான ஒன்று
அது ,
வைணவத்திலும் வருகிறது ,சைவத்திலும் வருகிறது சாகிதத்திலும் வருகிறது

கிருஸ்துவத்திலும் வருகிறது அது உபநிடத்தைப் போல் மிக தொன்ம்மியானது
தெய்வ அருள் ஒவ்வொரு நிமிடத்திலும் செயல்படவே காத்திருக்கிறது ஆனால் ஒருவன்
அறியாமை நியதியிலிருந்து வெளியே வந்து ஒளியின் நியதியில் வளரும் போது தான் அது
வெளிப்படுகிறது .ஓர் அற்புதமான ஆட்கொள்ளுதல் போல் அது அடிக்கடி நிகழ்ந்த போதிலும் அது ஏதோ திட்டமில்லாமல் நிகழும் தான் தோன்றி இயக்கம் அல்ல ,சாதகனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இறுதி விடுதலைக்கு அவனை அழைத்துச்
செல்லும் பேரொளி அது ,,,,,,,,,,

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய

அன்புடன் விசாலம்

No comments: