Friday, September 7, 2007

இறைவன் ஒரு தபால்காரன்

இறைவன் ஒரு த்பால்காரன் ,
கடிதம் அளிப்பது
அவன் வேலை ,
நல்ல செய்தியா,
அவன் பார்ப்பதில்லை,
கெட்ட செய்தியா ?
கவலையில்லை,
பாராட்டுவதுமில்லை,
நிந்திப்பதும் இல்லை,
தபால் கொடுப்பது
அவன் கடமை ,
அதை அனுபவிப்பது
நாம் மட்டும் தான்,
அவரவர் வினை அவரவர் அறுக்க,
இறைவன் எங்கே நடுவில் வருவார்?

அன்புடன் விசாலம்

No comments: