Friday, September 7, 2007

அது என்ன ரகசியம்

அது என்ன ரகசியம்?

மூங்கிலே உன் அழகுதான் என்ன?
வளைந்து கொடுக்கும் தன்மை தான் என்ன?
மழையோ ,புயலோ,
இடியோ மின்னலோ,
தாங்கி நிற்கிறாய்,
எப்படி இது உன்னால் மட்டும்?
ஏற்றத் தாழ்வு என் வாழ்வில் ,
வளைந்து கொடுக்க
கற்றுக் கொடு,
எனக்கும் நீ அந்த ரகசியம் ,,,,,,,,,,,
நீ உடைவதில்லை
சூராவளியிலும் சாய்கிறாய் ,
கீழ் மண்ணைத் தொடுகிறாய் ,
திரும்பி எழுந்து நிற்கிறாய்,
எப்படி இது உன்னால் மட்டும் ?
வாழ்க்கை சுமை,,பாரம்
நான் அதனால் சாய்கிறேன் ,
அதில் நிமிர்ந்து நிற்க
கற்றுக்கொடு ,,
எனக்கும் நீ அந்த ரகசியம் ,,,,,,,,,,
சுனாமி வந்தாலென்ன?
பெரிய வெள்ளம் அடித்தால் என்ன?
தைரியமாக எதிர்க்கிறாய்,
அதனுடன் ஒட்டிப் போகிறாய்,
எப்படி இது உன்னால் மட்டும் ?
சமசார சாகர வெள்ளம்
அதில் மூழ்கும் நான்
அதில் எதிர்நீச்சல் போட
கற்றுக்கொடு ,
எனக்கும் நீ அந்த ரகசியம் ,,,,,,,,,
எந்தச் சந்தர்ப்பத்திலும்
நீ உடைவதில்லை ,
சிரித்தபடி ஊஞ்சல் ஆடுகிறாய்,
சமநிலை தத்துவமாய்
துக்கத்திலும் ,சுகத்திலும் ,
எப்படி இது உன்னால் மட்டும் ?
என் சோக வாழ்க்கை ,
சிரித்தபடி வெல்ல
ஒரே நிலையில் ஏற்க
கற்றுக்கொடு எனக்கும் நீ
எனக்கும் நீ அந்த ரகசியம் ,,,,,

,
அன்புடன் விசாலம்

No comments: