Friday, September 7, 2007

தாய்ப்பால்

குவா குவா"என்று அழுதேன்,
தாய்ப்பாலுக்கு ,,,
கவனிக்கவில்லை,தாய்,
ங்கா ..இங்கா ,,," என்று
குரலை மாற்றினேன் ,
வந்தாள் என் தாய் ,
கைக்காலகளை உதைத்தேன்
மகிழ்ச்சியில் ,,தூக்குவாளா?
என்னை ,,உதட்டில் ஒரு
புன்னகை நெளிய
"கிளு கிளு" என்று சிரித்தேன்,
ஆனால் அவள்
தூக்கவில்லை ,,,,,,
"ஆபீஸ் கிளம்பும் நேரம்
எப்படித்தான் தெரியறதோ'?
ஒரு முணுமுணுப்பு ,,
ஒரு சலிப்பு,,,,,,
அலுத்துக் கொண்டாள்,
என் பொறுமை போனது,,
வீல் வீல் "என்று அழுகை ,,
வாயில் அடைத்தாள் "நிப்பிளை"
நாக்கால் சுழட்டி தள்ளினேன் ,
முகம் சுளுக்கினாள்,
"என்ன நாக்கு நீளம்
ஆறு மாதத்தில் !"
பால் புட்டியை
வாயில் அடைத்தாள்,
"அம்மா உன் பாலுக்கெல்லவா
நான் அழுகிறேன் ,
பால் புட்டியில் ஏது பாசம் ?
ஏது பந்தம்?
முலைப்பாலுக்கு
ஈடேது இணையேது?
உன் அனபை எனக்கு
ஊட்டம்மா ,
முலைப்பால
கொடு அம்மா ,,,,,,,,,

அன்புடன் விசாலம்

No comments: