Friday, September 7, 2007

வதந்தி

என் பெயர் வதந்தி ,
எண்ணுள்ளே ஒரு தீ ,
ஒரு சிறு பொறி போதும் ,
உடனே பற்றிக் கொள்வேன் ,
பல இடங்களில் பரவி விடுவேன் ,
எல்லைத்தாண்டியும் போய் விடுவேன் ,
காது மூக்கு வைத்து திரிப்பதில் ,
எனக்கு நிகர் நானேதான் ,
நல்லெண்ணதுடன் ஒரு பெண்,
கூடவே ஒரு ஆண்,
பார்த்து விட்டால் போதும் ,
பெண்ணைக் காதலி ஆக்கி விடுவேன்
வரம்பு மீறி பேசியும் விடுவேன் ,
எல்லாம் தலைக்கீழாக மாற்ற முடியும் ,
என்னால் எதையும் திரிக்க முடியும் ,
ஆஸ்பத்திரியில் ஒரு தலவர்
திடீரென்று இறந்து விடுவார் ,
மறு நாள் பிழைத்தும் கொள்வார் ,
பத்து சவரன் கொள்ளைப் போனால்
ஐம்பது சவரன் ஆக்கிவிடுவேன்
பிள்ளையார் பால் குடித்தது,
உலகம் முழுவதும் பரவியது ,
தெரிந்ததா இப்போது என் சக்தி ,
கொடுங்கள் எனக்கு முக்தி ,

No comments: