Tuesday, September 18, 2007

மெழுகுவர்த்தி

எனக்குப் போதித்த எல்லா ஆசிரியர்களுக்கும் கைகள் குவித்து தலை வணங்குகிறேன் என் அன்னை , என் தந்தைக்கு முதல் வணக்கம் அவர்கள் தான் என் முதல் ஆசிரியர்கள்,
ஆசிரியர் ஒரு உதாரணப் புருஷராக இருத்தல் மிக அவசியம், எதைப் போதிக்கிறாறோ
அதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டுதல் மிக அவசியம்..சொலவதொன்று
செய்வதொன்று என்று இருத்தல் சரியாகாது,மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர்
சேமிக்கும் தொட்டியில் நல்லத் தண்ணீர் இருந்தால் நாம் குழாயைத் திறக்க நமக்கும்
சுத்தத் தண்ணீர் கிடைக்கும் .ஆனால் அந்தத் தொட்டியில் கலங்கலாக அழுக்குநீர்
இருந்தால் குழாய்த் திறக்க நமக்கும் அதுவேதானே வரும் ? ஆகையால் மாணவர்களிடம் ப
பாசமாக அன்புடன் பழகி அவர்களுடன் ஒன்றிப் போக நல்ல பலன் கிடைக்கும் ,அந்த நேரத
நேரத்தில் அவர்கள் மனதில் நல்ல விதைகளை விதைத்தால் பின் பெரிய மரமாகி நல்ல ப
பழங்களைக்கொடுப்பது நிச்சியம். .

ஆசிரியர் ஒரு குயவன் ,
பச்சைமண் பானையாகுகிறது
அவரே நாட்டின் அஸ்திவாரம்,
மாணவன் அவரின் சாரம் .
அன்பின் போதனை
அவரது சாதனை
நற்சிந்தனைகளின் ஊட்டம்
இலட்சியங்களின் ஏற்றம்
தேவை இன்று பல "அப்துல் கலாம்"
என் மதிப்புக்குரிய " சலாம் " ,
ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தி ,
கரைந்து போகிறார் ஆனால்
ஒளியைத் தருகிறார்


அன்புடன் விசாலம்

No comments: