Thursday, September 6, 2007

இன்சொல்

இன்சொல் ஒரு இனிய சொத்து .
கொடுக்கக் கொடுக்க கொட்டும் முத்து,
முகத்திற்குத் தேவை ஒரு புன்னகை,
வாழ்வின் மகிழ்ச்சி வளரத் தேவை,
இனியச் சொல் நட்பை வளர்க்கும் ,
இன்னாச்சொல் உறவை முறிக்கும்
இனியவன் என்ற நற்பெயர் வாங்கலாம்
அவப்பெயர் கொடுக்கும் வன்சொல் தவிர்க்கலாம்
இன் சொல்லில் உலகம் மயங்கும்
வன் சொல்லில் வரவே தயங்கும்
இனியப்பழம் நம்முன் இருக்க
எட்டிக்காயின் மேல் ஏன் விருப்பம்,,,,

அன்புடன் விசாலம்

No comments: