Friday, September 7, 2007

கடவுளின் படைப்பு

கடவுளின் படைப்பு ,,
அன்பு குழந்தைகளே நம் பெரியவர்கள் நமக்கு எப்போதும் நன்மைக்காகவே சில அறிவுரைகள் வழங்குவார்கள் அதுவும் தாய் என்றால் கேட்கவே வேண்டாம் எப்போதும்
குழந்தைகளின் நலத்தையே சிந்திப்பாள்,,இது பற்றி ஒரு கலைமானின் கதைச்
சொல்கிறேன் ,,,,,,

ஒரு காட்டில் ஒரு கலைமானின் குடும்பம் வசித்து வந்தது ,,அதன் குட்டிகளும் இருந்தன,
அந்த அம்மா கலைமான் தன் குட்டிகளிடம் ஒரு நாள் சொல்லியது "குழந்தைகளே,,நீங்கள்
தனியாக ஒரு இடமும் செல்லக் கூடாது புலி சிங்கம் போன்ற மிருகம் பாய்ந்து உங்களைக்
கொன்று விடும் .ஆகையால் எப்போதும் சேர்ந்தே இருங்கள்",,
எல்லாக் குட்டிகளும் தலையைச் சம்மதத்துடன் ஆட்டியது ,ஒரு நாள் ஒரு குட்டி வெளியே போய் பார்க்க ஆவல் கொண்டு தன் இருப்பிடத்தை விட்டு ஆனந்தமாய் சுற்றியது ,,இதைக் கூர்மையாக இரு கொடூரமான் பளபளக்கும் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன ,,,ஆம் ,,அது புலியினுடையது தான் ,,சமயம் பார்த்து அது மேல் பாய
கழுத்தைக் கவ்வி இழுத்துக்கொண்டு போய்விட்டது ,,முடிந்து விட்டது அதன் கதை ,
தாய் கலை மான் தன் குட்டி வராமல் இருந்ததைப் பார்த்து வருத்தம் கொண்டது ,,,ஆனால் அது என்ன செய்ய முடியும்,,,,,?
ஒரு வாரம் சென்றது இப்போது இன்னொரு மான் கலைமான் குட்டி தானும் கொஞ்சம் தூரம் ஒடிப் பார்க்கலாம் என்று நினைத்து வீட்டை வீட்டு வெகு தூரம் வந்து விட்டது தன் இஷ்டப்படி திரிந்தது பின் ஆய்ந்து ஓய்ந்து களைத்தது ,ஏதாவது ஏரி கண்ணில்
தென் படுகிறதா என்று தேடியது ,,சிறிது நேரம் அலைந்தப் பின் ஒரு ஏரி பார்த்தது
அங்கு வேகமாக்ப் போய் குனிந்து நீரைப் பார்த்தது நல்ல பளிங்குப் போல் இருந்த
தண்ணீரில் அதன் முகம் தெரிந்தது ,"ஆஹா என்ன அழகு முகம் என்க்கு ,,,,
என் கொம்பு அதை விட அழகுதான் ,,,,,"என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது
பின் அதன் கால்களையும் அது நீரில் கண்டது " சீ சீ என்ன அசிங்கம் ..குச்சி போல்
கால்கள்,,என்ன கடவுள் ,,,,,இப்படி இந்தக் கால்களைப் படைத்திருக்கிறார்,,,?அழகாக்வே
இல்லையே ,,,,என்று கடவுளை நிந்தித்தது ,,,,
உடனே தட தட வென்ற சத்தம் கேட்க பல வேடர்கள் ஓடி வருவதையும் பார்த்தது ,
எடுத்ததே ஒரு ஓட்டம் அதற்கு உதவியது அதன் கால்கள்,,,,,,எந்தக் கால்களை அது குச்சிப்போல் என்று இகழந்ததோ அந்தக் கால்களால் வேகமாக ஓடி அவர்களிடமிருந்து
வெகு தூரம் வந்து விட்டது ,,நல்ல வேளை ,,பிழைத்தோம் என்று எண்ணி இருக்கும் தருவாயில் ,,அதன் கொம்புகள் ஒரு புதரில் மாட்டிக் கொண்டது ,,எத்தனைத் தடவை முயன்றும் வெளியே எடுக்க முடியவில்லை " நான் அழகு என்று நினைத்தக் கொம்புகள்:
என்னை மாட்டிவிட்டனவே ,,,அசிங்கம் என்று எண்ணிய காலகள் என்னைத் தப்ப வைத்தும் கொம்பால் நான் மாட்டி கொண்டேனே,,,,.கடவுளின் படைப்பைப் பார்த்து
இகழ்ந்தேனே ,,,என்று நினைக்கும் தருவாயில் வேடர்கள் வந்து அம்பு எய்தி அதைக்
கொன்று விட்டனர் ,,,,,,,,
தாய்ப் பேச்சைக் கேட்க வேண்டும் ,,,கடவுளின் படைப்பை இகழக் கூடாது,,,,,,,,

அன்புடன் அம்மம்மா விசாலம்

No comments: