Thursday, September 6, 2007

கோவிந்தா ஆலா ரே

மும்பையில் ஜன்மாஷ்டமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது இதில்
வாலிபர்கள் தன் வீர விளையாட்டைக் காட்டிப் பரிசும் பெறுவார்கள் ,சாலையில் இரு புறமுள்ள பல மாடிக் கட்டடங்களில்நடுவில் கயிற்றின் உதவியால் ஒரு பெரிய மண்சட்டி
பூக்களுடன் வர்ண துணியுடன் மூடி நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ,இந்த
விளையாட்டு வீரர்களை "ராமாக்கள் "என்பார்கள்,,""ஆலா ரே ஆலா ,,,,,,ராமா ஆலாரே
என்ற பாட்டு முழங்க தாரை தம்பட்டத்துடன் லேஜியம் ஆடி வருவார்கள்.இந்த லேஜியம்
மும்பயி ஸ்பெஷல் தான் ,வில்லுப் போல் வளைந்திருக்கும் ஒன்றில் ஜால்ராக்கள் கட்டப்
பட்டிருக்கும் அதை அவ்ர்கள் லாவகமாகக் குதித்து ஆடி வரும் அழகே அழகு ,அந்த
மண்சட்டியில் ப்ல ஆயிரம் ரூபாய்கள் வைக்கப் பட்டிருக்கும் ..இந்த ராமாக்கள் மனிதன் மேல்
மனிதன் ஏறி கோபுரமாக அமைத்து அந்த மண்சட்டியை உடைத்து பணமுடிப்பைப் பெற்றுக்
கொள்ள வேண்டும் அவர்கள் அதை எடுக்க விடாமல் பலர் வாளி நிறைய தண்ணீர்
நிரப்பி அவர்கள் மேல் வீசுவார்கள் சிலர் எண்ணெயும் தடவுவார்கள் ,இது கண்ணன்
ஆயர்பாடியில் உறியிலிருந்து சிறிவர்கள் உத்வியுடன் வெண்ணெய் திருடி உண்டது நினவு
படுத்தும் ,
இதே போல் தமிழ் நாட்டிலும் வரகூரில் நடைப் பெருகிரது இங்குதான் ஸ்ரீ நாராயணத்தீர்த்தர்
கிருஷ்ணனுக்கு என்று ஒரு ஆஸ்ரமம் அமைத்தார் ,கண்ணனை வழிப்பட்டார் ,இங்கு
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மிகச் சிறபாக நடைப் பெறுகிறது ஒரு இருபது அடி உயரமுள்ள
தூண் கோவில் வாசலுக்கு வரும் ,அதில் உச்சியில் சீடை முறுக்கு என்ற பல
பட்சண்ங்களை மூட்டையாகக் கட்டி வைப்பார்கள் பின் தொங்க விடுவார்கள் அந்த
மரத்தில் எண்ணெயைத் தடவி வைப்பார்கள் .அதில் ஏறினாலே வழுக்கும் ,இங்கும் இத அடையப் போட்டியுடன் வீர விளையாட்டு நடை பெறும் ,இதில் என்ன தத்துவம் இருக்கும்
என்றால் கடும் உழைப்பால் பல இன்னல்களைக் கடந்து பல தடவை முயற்சி செய்தப் பின்
வாழ்க்கையில் வெற்றி உண்டாகும் பின் வாழ்க்கையே இன்பம் தான்

ம்துராவில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மலருடன் "கன்னையா கோ ஜய் போலோ " என்ற கோஷத்துடன் வெள்ளிக் காசுகள் தங்கக் காசுகள் வீசி அர்ச்சனைச் செய்கிறார்கள்
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புதுமையுடன் கண்ணன் பிறக்கிறான்
அவன் அருள் எல்லோரும் பெற பிரார்த்திப்போம்

அன்புடன் விசாலம்

No comments: