Tuesday, September 18, 2007

ரொசகுல்லா

ரசகுல்லா என்றாலே கொல்கத்தாவின் நினைவு தான் வரும் ,அங்குக் கிடைக்கும் ரசகுல்லா
வாயில் போட்டுக் கொண்டவுடனேயே அப்படியா கரைந்துப் போகும் மேலும் கடைசிவரை
அந்த இனிப்பு நிலைத்து இருக்கும் ,பனீரால் {paneer} செய்வது ,பனீர் என்பது பாலை
முறித்துப்பின் அதை ஒரு மெல்லியக் காட்டன் துணியில் வடிக்கட்டி அதை அப்படியே
முடிந்து ஒரு சுகாதாரமான இடத்தில் தொங்கவிட்டு விட வேண்டும் பின் எல்லா நீரும்
வடிந்தப்பின் மீதி கெட்டியாக வருவது இந்தப் பனீர் இது எதற்கு சொல்ல வருகிறேன் என்
என்றால் ரச்குல்லா சாப்பிட கண் பார்வை நன்கு தெளிவாகிறது ,தவிர மிகவும் இளமையாக இருக்கலாம் ,
இப்போது கொல்கத்தாவில் ஜாதவ்புர் என்னும் இடத்தில் ஹெர்பல் ரசகுல்லா
கண்டுப்பிடித்திருக்கிறார்கள் ,இதில் கேரட் அதிகம் சேர்த்து கேரட் ரசகுல்லா ஆகிறது
இதற்கு இப்போது ரொம்ப டிமேண்ட் ,,,ஆனால் இரண்டு கடைகளில் தான் கிடைக்கிறது ,
இது மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டால் வெளியூரிலும் அனுப்பலாம் ,இதில் கேரடோன்
என்ற சக்தியும் antioxident {தமிழில் என்ன?}இருப்பதால் உடலுக்கு ஊட்டமும்,, உடலில்
தாங்கும் சக்தியையும் தருகிறது,,immunity ,,,, நம் உடலுக்கு வயது ஏற ஏற தாங்கும்
சக்தி குறைகிறது அநத நேரத்தில் அதிக சக்திக் கொடுக்கும் பதார்ததங்கள் வேண்டும் ஆனால் அதில் கொழுப்பும் இருக்கக் கூடாது ,ஆகையால் ரசகுல்லா தின்பதற்கு
ஆலோசனை சொல்கிறார் திரு உத்பல் ராய் சௌதரி ,இவர் உணவு டெக்னாலஜியில்
தலைமை வகிக்கிறார் ,இவர் சொல்கிறார் " இந்த ஹெர்பல் ரசகுல்லா கேன்சர் வராமல் தடுக்கிறது ,அதிக கொலஸ்டரலைக் கட்டுப்ப்டுத்துகிறது தெம்பிலாமல் இருப்பவர்களுக்கு
சக்தி அளிக்கிறது" ,,,,,, வாருங்கள் நாம் கொல்கத்தா போகலாம் ரசகுல்லா வாங்க,,,,,,

அன்புடன் விசாலம்

No comments: