Friday, September 7, 2007

ஒரு கரு பேசுகிறது

அம்மா ,உனக்கு முக்கியம்,
உன் அழகு ,
அழகுப் போட்டியில்
நம்பர் ஒன் ஆயிற்றே!
நான் வந்தால்
உனக்கென்ன கஷ்டம் ?
உன் சுதந்திரத்திற்கு ,
என்னை அழித்தாய் ,
உன மார்பின் அழகு
குலைந்து விடுமா?
தாய்மை விரும்பாத
தாயும் உண்டோ?
இரண்டு மாத கர்ப்ப அறையில்
நான் கடந்து தவிக்க ,
என்னை நீ கொன்றது ஏன் ?
உன் அழகுப் போட்டிக்கு ,
நான் என்ன முட்டுக்கட்டையா?
உன் அழகு மங்கிவிடும் .
என்ற பயமோ?

ஐந்து வருடங்கள் ஓடின
நீ என்ன சாதித்தாய்?
கோவில் கோவிலாய் போகிறாய் ,
ஜோசியரைப் பார்க்கிறாய் .
பரிகாரம் செய்கிறாய் .
மழலைச்செலவம் வேண்டுமென,
லட்சுமி போல் நான்
பிறக்க இருந்தேனே ,
என்னை அழித்து
இப்போது ஏன் அழுகிறாய்?


அன்புடன் விசாலம்

No comments: