Thursday, March 29, 2007

தியானம்

ஒம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய .அன்னைக்கு சமர்ப்பணம்.

பாசிடிவ் ராமா என்னை தியானத்தைப்பற்றி எழுதும்படி அன்பு வேண்டுகோள் விடுத்தார் .

என் சிற்றறிவுக்கு எட்டியவரை முயற்சி செய்கிறேன். தியானத்தைப்பற்றி பல பெரியவர்கள்,பல வழிகளில் கற்றுக் கொடுக்கிறர்கள்.அதாவது சிதறிக்கிடக்கும் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து.கடைசியில் எண்ண ஓட்டங்களே இல்லாமல், மனதை ஒருமைப் படுத்துவது தியானம். அப்போது நம் மூச்சு ஓட்டம் தான் ந்ம் கவனத்தில் வரும் ..நிறைய பயிற்சிக்குப்பின் அதுவும் மறையும். இந்த நிலையை

அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் என்கிறார்கள், அதை அனுபவித்தவர்கள்.

இதற்கு முன்,

தியானம் செய்ய நம் உடலை அதற்கு தகுதி ஆக்கிக் கொள்ள வேண்டாமா?அழுக்கு உடல் மீது புது சட்டைப் போட்டுக் கொண்டால் உள்ளே அழுக்கு போய் விடுமா?

மனதில் இருக்கும் அழுக்கை அகற்றினால்தான் தியானம் செய்யும் தகுதி நமக்கு ஏற்படும்.

எல்லாவ்ற்றுக்கும் மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.சுத்தமனம்,அசுத்தமன்ம் என்று இரண்டு வகை பிரிக்கலாம். அசுத்த மனம் அதிகம் தத்தளிக்கிறது. இந்த தத்தளிக்கும் மனத்தை அடக்க உதவுவது தியானம். அலை பாயும் மனம் தியானத்திற்கு ஒவ்வாது.

அழுக்கன் மனத்தில் எண்ணங்களின் ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும்.

கலங்காத நீரில் நிலவின் பிரதிபிம்பம் நன்கு தெரியும். ஆனால் கலங்கிய குட்டையில்

இருட்டுதான் நிலவும்.”மனம் ஒரு குரங்கு ,மனித மனம் ஒரு குரங்கு”என்ற பாடல் நினைவுக்கு வருகிறது தாவிக்கொண்டே இருக்கும்.அதை நிறுத்த அன்பு என்ற கடிவாளம் தேவை.

தினசரி செய்யும் வேலையில் நாம் நம்மை தியானத்திற்கு

தயார் செய்து கொள்ளலாம். வீடு கூட்டும் போது நம் மனதிலிருக்கும் குப்பைகளையும் கூட்டிவிட்டோம் என்று

எண்ணுவோம். மிக்ஸியில் அரைக்கும் போது நமது

அகங்காரம்,பொறாமை,போன்ற தீய குணங்களையும்

பொடிப்பொடியாக அரைத்து விட்டதாக எண்ண வேண்டும்

ரொட்டி வட்டமாக இடும் போது நம் உள்ளிருக்கும் அன்பு

சிறு வட்டத்திலிருந்து பெரிதாக வளர்ந்து கொண்டே

போகிறது என்று எண்ணலாம். எந்த வேலை செய்தாலும்

கடவுளுக்கே என்று அர்ப்பணித்து சிரத்தையாக செய்தால்

அதனால் உண்டாகும் பலன்கள் பல. கோவில்களில் பிரசாதம் மணக்க பொங்கல்,புளியோதரை ருசி பார்க்காமல் செய்யப்படுகிறது. ஆனாலஅதன் ருசியோ தனிதான். ஏன் ? எம்பெருமான் பிரசாதம் என்று அன்பு உள்ளத்துடன் செய்யப்படுகிறது. அதை சாப்பிடும் நமக்கு ஒரு கெடுதலும் வருவதில்லை. ஆனால் நல்ல ஹோட்டலில் சாப்பிடும் போது சிலசமயம் வயிறு கெடுகிறது. ஏன்?.. சமைப்பவரின் எதிர் மறைவு எண்ணங்களால் வரும் அலைகள், செய்யும் பதிவாகி நம்மை வந்து அடைகிறதுஆகையால் எங்கும் அன்புதான் மூலகாரணம். அதை எல்லா காரியங்களுக்கும் பயன் படுத்தவேண்டும். எல்லோரையும் அன்புடன் பார்க்க

கடவுள் நமக்குத்தெரிவார். இந்த சூழ்நிலையை

வளர்த்தால் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று பேசுகிறோம். அந்த வேலையை கோவிலுக்கு நுழைந்து செய்வது போல்

செய்தால் அவர்களுக்கு தியானம் நன்கு வரும்.

காலையிலும் மாலையிலும் மன உளைச்சல் இல்லாமல் சஞ்சலமில்லாமல் அமைதியாக் இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் சிந்தனை ஒட்டங்களை

சிறிது சிறிதாக குறைத்து மௌனத்தைக் கடைப்பிடிக்க

வேண்டும். காலை, மாலயில் நாம் செய்த நல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் கணக்கிட்டு செய்யத்தகாத காரியங்களை படிப்படியாக குறைத்து

நம் வாழ்க்கையை உயரும்படி செய்தால் அல்லது இதனால் நம் வாழ்க்கை தரம் உயர்ந்தால் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம் நமக்குள் ஒரு அரிச்சந்திரனோ, ஒரு புத்தரோ, ஒரு துகாராமோ குடிகொண்டிருக்கவேண்டும். நம் மனதில் தேளுக்கும்

ஓர் பாம்புக்கும் அதாவது சாத்தான் போன்ற

குணங்களுக்கும் இடம் கொடுத்தால் எங்கிருந்து தியானம் வரும்? சரி இப்போது நாம் தயார் ஆகி விட்டோம்

தியானத்திற்கு. …………………………

வளரும். விசாலம்

No comments: