Friday, March 30, 2007

காயத்திரியின் மகிமை





Om Bhur Bhuva Svaha
Tat Savitur Varenyam (um)
Bhargo Devasya Deemahi
Dhiyo Yo Nah Prachodayat

Om Shanti Shanti Shanti



ஆவணியாவட்டத்தின் மறு நாள் காயத்திரிஜபம் என்ற நாள் வருகிறது. அதாவது யக்ஞோபவீத தாரணம் செய்தபின் மறு நாள் இது வரும் அந்த நாளுக்கே ஒரு தனி சிறப்பு உண்டு. காயத்திரி ஜபம் அன்றுதான்
செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம் அது மிகுந்த சக்தியான மந்திரம். ஆதவன் நம் கண்ணிற்குத் தெரியும் பிரும்மம். அந்த சூரியன் இல்லை என்றால் ஒரு புல் பூண்டு கூட இருக்காது. அப்படிப்பட்ட பிரும்மத்தை வழிபட்டு வாழ்க்கையில் மேன்மை பெற ராஜரிஷி விசுவாமித்திரர் என்னும் க்ஷத்திரியர் நமக்கெல்லாம் கண்டுப் பிடித்துத் தந்த வரப்பிரசாதம், இதை யாவரும் உருவேற்றலாம் இது ஜாதி மதத்திற்கு அப்பால் பட்டது வேதமே காயத்திரி.

"காயத்திரி பரமோ மந்த்ர:
நமாதூர் தைவதம் பரம்" என்கிறது சாஸ்திரம், ந மாதுர் …அதாவது தாயை விடச் சிறந்த தெய்வமில்லை
காயத்திரியை விட சிறந்த மந்திரமில்லை காயத்திரி தேவி உலகத்திற்கே பராசக்தி ஆவாள். வேதத்தில் வரும்
சத்வ, ரஜ, தமஸ் என்ற முக்குணங்களுக்கும் காரணமாகவும், பரமேஸ்வரியின் சக்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. உபநயனம் போது பிரும்ம உபதேசம் நடக்கும். அந்தப் பையன் தன் தந்தையின் காதில்
"ஓம்" என்ற ப்ரணவ மந்திரம் ஒதுவதை நாம் பார்த்திருக்கிறோம் பின் காயத்திரி மந்திரம் ஆரம்பிக்கிறது
இதில் ஓம் பூர்புவஸ்ஸுவ::என்று ஆரம்பம். இதில் மூன்று வேதமும் வருகிறது.
மனு அவர்கள் கூறுகிறார்
"த்ரீப்ய; ஏவது வேதேப்ய;
பாதம் பாத மதாது ஹத் " பிரும்மதேவன் வேதத்தின் சாரத்தைக்காண
எண்ணி பின் ரிக் வேதத்திலிருந்து பூ: என்பதையும் யஜுர் வேதத்திலிருந்து
புவ: என்பதையும் சாமவேதத்திலிருந்து ஸுவ: என்றும் கண்டு பிடித்தாராம்
அதன் பின்னரும் அதை மேலும் ஆராய்ந்தார் பிரணவம் என்ற
ஒங்காரம் ஒளிர்ந்தது. ஓம் என்பதை பிரித்தால் அ+உ+அம் என்று
வெளிப்படும். அது படைத்தல், காக்கல், அழித்தல் அதாவது பிரும்மா,
விஷ்ணு, சிவன் மூன்றையும் தன்னகத்தே கொண்டது.
காயத்திரி என்பதைப் பிரித்தால் காயந்தம்+த்ராயதே என்று வரும்
அதாவது ஜபிப்பவனைக் காப்பாற்றுகிறது,
நான் வேதங்களில், மந்திரங்களில் காயத்திரியாக இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணபரமாத்மா.
நாரதர் சொல்லுகிறார்,"த்வமேவ சந்த்யா, காயத்ரி சாவித்ரி சரசஸ்வதி
பிரும்மாணி வைஷ்ணவி ரொஊத்தி, ரக்தஸ்வேதா ஸிதேதரா, என்று
புகழுகிறார்.
பின் சொல்லுகிறார் ஓ காயத்ரியே உன் புகழை என்ன என்று சொல்வது?
மஹான்கள் சரீரத்தில் நாடியாகவும் ஹ்ருதயத்தில் பிராண சக்தியாகவும் கண்டத்தில் ஸ்வப்ன நாயகியாகவும் பிந்து ஸ்தானத்தில்
இருப்பவளாகவும் மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாகாவும் பாதாதி
கேசம் வரை வியாபித்தவளாகவும் சிக மத்யத்தில் அமர்ந்த்திருப்பவளாகவும் சிகயின் நுனியில் மனோன்மணியாகவும்
எல்லா வஸ்துக்களிலும் நிறைந்து இருக்கும் சக்தியாகவும் ஆகிறாள்.
காலையில் காயத்ரியாகவும் உச்சிப்பொழுதில் சாவித்ரியாகவும்
மாலையில் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்..
ஒம் பூர்பவஸ்வ: ஒம் தத்சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோன;ப்ரசோதயாத்…….இதுதான் காயத்ரி மந்திரம்
இதன் பொருள்— எல்லா பிராணிகளின் இதயத்தில் அந்தர்யாமியாய்
இருந்துகொண்டு புத்தியைத் தீட்டிக்கொடுப்பவளும் சூரியமண்டலத்தில் இருந்துகொண்டு வெளிச்சம் கொடுப்பதால் யாவரும் சேவிக்க
வேண்டியவளாகவும் விளங்குகின்ற காயத்ரியைத் தியானம் செய்கிறேன்
இனி அதன் மகிமையைப் பார்க்கலாம்
காயத்ரி ப்ரோச்யதே புதை” பாபங்களிலிருந்து காக்கிறது புத்தி தீர்க்கமாகிறது. சிறந்த சித்திகள் கிட்டுகின்றன.
“ந தத்ர ம்ரியதே பால;…. குழந்தைகள் அகால மரணம் அடைவதில்லை
சரவ பாபானி நச்யந்தி காயத்ரி ஜபதே ந்ருப; எல்லா பாபங்கள்யும்
போக்கி விடுகிறது.
இத்தனை சிறப்பு பெற்ற காயத்ரியை விடாமல் ஜபித்து வாழ்வை மேம்படுத்தலாமே பெண்களும் ஜபிக்கலாம். பேய் பிசாசு நம்மை அண்டாது. ஐந்து முகங்கள் பத்து கைகளுடன் சந்திரக் கலைத்தரித்த காயத்ரி
நம்மை எல்லாம் ரக்ஷிப்பாளாகுக

No comments: