Friday, March 30, 2007

கண்ணன் பாட்டு



வரும் ஆகஸ்ட் 15 ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, கீதையை நமக்குஅளித்த கண்ணன் அல்லவா?
ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே அர்ததஜாம நேரத்திலே அவதரித்தானே;
"பூபாரம் தீர்க்க பாரதப் போர் முடித்த சீலா
கோபால கிருஷ்ணா ஆதிமூலா பரிபாலா" என்ற பாட்டு ஞாபகம் வருகிறது
இப்போது குழந்தைகளுக்கு இந்தக் கவிதை, இதைப் பாட்டாகவும் பாடலாம், ராகம் மோகனம்


கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார்மேக வண்ணனாம் ,
வெண்ணை உண்டக் கண்ணனாம்
மண்ணை உண்டக் கன்ணனாம்
குழலினாலே மாடுகள் கூடச் செய்தக் கண்ணனாம்,
கூட்டமாகக் கோபியர் கூட ஆடும் கண்ணனாம்,
மழைக்கு நல்ல குடையென மலைப்பிடித்தக் கண்ணனாம்,
பூதனையின் பால் உறிந்து மோக்ஷம் கொடுத்தக் கண்ணனாம்,
உரலிலே கட்டுப் பெற்றுதவிழ்ந்து வந்த கண்ணனாம்
உறியில் வெண்ணெய்க்கு குறி வைத்த திருட்டு மாயக் கண்ணனாம்
அன்னை யசோதைக்கு வாயைக் காட்டி அசர வைத்தக் கண்ணனாம்,
விஸ்வரூபம் பார்த்த அன்னையை மயங்க வைத்தக் கண்ணனாம்,
கோபிகளுடன் ராஸலீலை ஆடிவந்தக் கண்ணனாம்,
பகளாசுரனின் மூக்கை பிளந்து நற்கதி கொடுத்தக் கண்ணனாம்.
தேனுகாசுரனை சுழட்டி வீசி தூர எறிந்தக் கண்ணனாம்
கம்சன் அம்மான் மேலே ஏறி வதம் செய்தக் கண்ணனாம்,
தேவகி, வசுதேவரை, சிறை மீட்டியக் கண்ணனாம்
ஏழை நண்பன் குசேலனின் அவலை ருசித்து உண்டக் கண்ணனாம்
அபயம் என்ற திரோபதிக்கு சேலை தந்த கண்ணனாம்
அர்ஜுனனுக்கு சாரதியாய் தேரை ஓட்டியக் கண்ணனாம்
கீதையின் நாயகன் எங்கள் கண்ணனாம்,
ராதாவின் அன்பான கண்ணனாம்
விஷ்ணுவின் அவதாரக் கண்ணனாம்
அவன் ரக்ஷிப்பான் நம்மை எப்போதும்,கண்ணனாம்

இதைக் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து பாடுவோம்


விசாலம்

1 comment:

Mazalais.com said...

அன்பு சகோதரி,

அசத்திவிட்டீர்கள், இதுதான் வாயுவேகம், மனோவேகம் என்று சொன்னார்களோ?

ஆகிரா