Friday, March 30, 2007

நாரயணீயம் பிறந்தது


"அழகு கேரளத்தில், மேல்புத்தூரில் பிறந்தாயே
நாரயணா என்னும் நாமத்தில் வளர்ந்தாயே !
குருவின் வாத நோயை ஏற்றாயே
நாராயணீயம் பாட்டுக்கள் உதிர்ந்தனவே,
சிறு வயது, கல்வியில் மனமில்லை.
நற்பழக்கங்களுக்கும் இடமில்லை,
தந்தை சொல்லியும் கேட்கவில்லை
தாயின் பாசமும் உணரவில்லை,
வீட்டை விட்டு ஓடி வந்தாய்...
அச்சுத பிஷாரடியைச் சந்தித்தாய்,
அவர் அன்பில் நீ மாறினாய்,
அவர் மகளையும் மணந்தாய்,
வெட்டிப் பொழுது போக்கினாய்,
மனைவி மனம் உடைத்தாய்,
"வேதம் கற்று வருமானம் தேடு,
மனம் திருந்தி புண்ணியம் தேடு"
தயக்கமாகச் சொன்னார் மாமனார்,
அவரிடமே வேதம் இவன் கேட்டான்
மாமனார் பாவம் வேதம் கற்றார்,
சீடரும் ஆனார் குருவும் ஆனார்,
இனிமையான வேதம்
தப்பாமல் பிறந்தது,
குரு அச்சுதரின் ஆனந்தம்
சிலகாலமே நீடித்தது,
காய்ச்சல் வந்தது
கட்டிகள் வந்தன.
வாத நோயும் வந்தது
படுக்கையிலும் தள்ளியது,
ஊரில் ஏச்சுப் பேச்சு,
அந்தணரில்லை அச்சுதர்,
வேதம் கற்றது பாவச்செயல்,
வேதம் ஓதுவது தவறான செயல்
அதுவே வியாதி,,,,,,,,
தன் குருவுக்கு இந்த நோயா?
நீ கதறினாய் கண்ணனிடம் ஓடினாய்,
"அந்த நோய் எனக்கு வரட்டும்
என் குருவும் நன்கு பிழைக்கட்டும்
உன் தவம் பலித்தது
கண்ணன் கண்திறந்தான்,
வந்தது உனக்கு அந்த நோய்,
அச்சுத குரு குணம் பெற்றார்,
தாங்க முடியாத நிலை
உன் உடல் அழுகின
கண்ணனிடம் அர்ப்பித்தாய்,
தியானத்தில் மூழ்கினாய்
உடல் நிலை மறந்தாய்
ஒருவர் சொல் கேட்டு
குருவாயூர் சென்றாய்,
கண்ணனிடம் கதறினாய்
கனவில் வந்தான்
மாயக் கண்ணன், கூறினான்
"மருந்து எழுத்தச்சனிடம்,
வாங்கி குண்மடைவாய்"
மீன் பிடிக்கும் எழுத்தச்சன்
வியப்புடன் உன்னைப் பார்த்தான்,
"முதல் மீனைத் தொட்டுக் கொண்டு
ஸ்ரீ குருவாயூரப்பனைப் பாடு,
யோசனையில் ஆழ்ந்தான்,
பட்டெனெப் புரிந்தது
மச்சாவதாரத்திலிருந்து பாடினாய்,
கவிதை அருவியாகக் கொட்டின,
ஒரு தசகம் முடிய
"அப்படியா கண்ணா?" என்பாய்
"ஆம்" என்று தலை அசைப்பான்
குருவாயூரப்பன் கண்திறந்து,
ரோகம் போக வரம் கேட்பாய்,
நூறு தசகம் முடிந்தன.
பாகவதமும் பிறந்தன,
நோயின் பூரண குணம்
குளிர்ந்தது அவன் மனம்
:நாராயணீயம்: பிறந்தது
நோய் போக்கும் சஞ்சீவி இது.

அன்புடன் விசாலம்

No comments: