Saturday, March 31, 2007

சிறு கவிதைகள்

*****
நான்கு மகன்களை
சுமை இல்லாமல் பெற்றாய்
இன்று நான்கு மகன்களுக்கும்
சுமை ஏன் ஆனாய்?
*****
கல்லறைக்குள் நான்,
மணவறைக்குள் நீ
புதைந்து போனது நானா?
இல்லை ரகசியமா?
*****
நீ வந்து போனாய்
மனம் புண்ணானது
ஈ போல் வந்து
உட்கார்ந்தாயோ?
*****
குருவிக்கூட்டைக்
கலைத்தேன்
பெண்சிசுவைக்
கலைத்தாயே!
*****

No comments: