Thursday, March 29, 2007

ஒரு விண்ணப்பம் யம ராஜனே

இந்தக் கவிதை ஒரு எதிர்மறை எண்ணங்களால் வந்தது இல்லை, என்க்கு இன்னும் நிறைய
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இன்னும் நிறைய சேவை செய்ய கடவுள்
சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் ,பின் ஏன் இதை எழுதினேன் ?

ஒரு நாள் ஒரு ஹாஸ்பிடல்
போயிருந்தேன் என் தோழியின் மாமியார் ரொம்ப மோசமான நிலையில் இருந்தாள் அந்தத் தோழி என்னிடம் "வீட்டிற்கும் ஹாஸ்பிடலுக்குமே நேரம் சரியாக இருக்கிறது என் கணவருக்கு இபோதுதான் வேலை உயர்வு கிடைத்திருக்கிறது, ஆகையால் லீவு எடுக்க
முடியவில்லை டென்சனில் ஓடாக தேய்ந்து போய்விட்டார் இந்தக் கிழவி கால் இழுத்து
கிடக்கிறாள் பாதி மயக்க நிலை ,,,20 நாளாக இதே வேலை அலுத்து போய்விட்டது ,,நீ ரெய்கி
கொடு ,,,,,என்று இழுத்தாள் ,அவள் எதற்கு ரேய்கி கொடுக்கச் சொல்கிறாள் என்று எனக்கு
புரிந்து விட்டது ,,,,,யாருக்காக பரிதாபப்படுவது? இதே போல பல அனுபவங்கள்,, எல்லாம் எழுதினால் உங்களுக்கு படிக்க நேரம் இராது ,, சரி கவிதையைப் படியுங்கள்,
ஒரு விண்ணப்பம் யமராஜனே,
மரணமே நான் உன்னை வரவேற்கிறேன்,
யமராஜனே என் கைகளை நீட்டி வரவேற்கிறேன்
கூடவே பிடி ஒரு விண்ணப்பம்,
வேண்டும் ஒரு கையொப்பம்,
பல நாட்கள் என்னைப் படுக்கையில் தள்ளாதே,
கோமா நிலையும் கொண்டு செல்லாதே,
முதல் நாள் ஆஸ்பத்திரி பரிவுடன் விசாரிப்பு,
பல நாட்கள் ஆனால் அதுவே மன சலிப்பு,
முதல் நாள் பழங்கள் ஹார்லிக்ஸ் வருகை,
போகப் போக உறவினர் வருவதும் நிற்கை,
மகனுக்கு வேலை பளு,,முகத்தில் டென்சன்,
தண்ணீர் போல் சிலவு, நடப்பது மௌனத்தில்,
குழந்தைகள் வருத்தத்தில், கவனக் குறைவு படிப்பில்,
உள்ளே வெளியே என்று அலையும் மருமகள்
என்று கஷ்டம் விடியும் என்று ஏங்கும் மகள்,
தேவைதானா இவைகள் எனக்கு ?
இப்போது புரிந்ததா உனக்கு ?
மரணமே உன்னை வரவேற்கிறேன்
கூடவே ஒரு விண்ணப்பம் தருகிறேன்,
பேசியபடியே என் உயிர் போகவேண்டும்.
கடவுள் நாமத்தில் நான் மரிக்க வேண்டும்
பிரார்த்தனையின் போது என்னை அழைத்து கொள்,
காலை நேரம் என்னை எடுத்துக் கொள்,
பள்ளி விடுமுறையாக இருக்கட்டும்
மழையும் கொட்டாமல் இருக்கட்டும்,
செத்தப் பின்னும் என் தலை உருள
சனிகிழமை என்னை அழைக்காதே
"சனிப் பிணம் தனிப்போகாது" என்று
இறந்த பின்னும் பெயர் கெடுக்காதே!
அஷ்டமி நவமியைத் தவிர்த்துவிடு,
விபத்தின் மரணைத்தை நிறுத்தி விடு,
போலீஸ் வரும் என்ற கவலை !
போஸ்ட்மார்ட்டம் என்ற தொல்லை
என் வாயில் ராம் ராம் சொல்ல விடு
புனித கங்கையை முழுங்க விடு
மரணமே உன்னை வரவேற்கிறேன்,
கூடவே ஒரு விண்ணப்பம் கொடுக்கிறேன் ,,
அன்புடன் விசாலம்

No comments: