Saturday, March 31, 2007

புரட்டாசி மாதத்தில்...கோவிந்தா!



வந்து விட்டது புரட்டாசி மாதம். எங்கும் கோவிந்தா! என்ற ஒலி முழங்கும்.

அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷம்.

நான் திருப்பதி போனபோது அந்த கோவிந்தாவின் தரிசனம் சரியாக கிடைக்கவில்லை அப்போது அவரிடம் மனதுக்குள்
பாடிய பாட்டு இது

"உன் கமலக் கண்களைப்
பார்க்க வந்த எனக்கு
பெரிய நாமத்தைப் போட்டு
ஏன் மறைத்திருக்கிறாய்?
ஆவலுடன் தரிசிக்க வந்த என்னை
"சருகண்டி...சருகண்டி" என்று
ஏன் தள்ள வைக்கிறாய்?
உன்னையே பார்க்க
ஒரு வழி தேடி விட்டேன்
உன் கர்ப்பகிரஹப் படியாய்
என்னைப் படைக்குமப்பா
உன்னையே கண்டு களிக்கும்
அருள் கொடுத்தருளப்பா..!"


திருப்பதியில் ஏழுகொண்டலவாடா, கோவிந்தா, வெங்கட்ரமணா என்று பலவிதமான
பக்தி ஒலி கிளம்ப நாமும் நம்மையும் அறியாமல் அந்த முழக்கங்களில் சேர்ந்து கொள்கிறோம் உடல் சிலிர்க்கிறது கண்களிலிருந்து கண்ணீர் தன்னையும் அறியாமல்வருகிறது எல்லா இடங்களிலும் நவராத்திரியின் போது அம்பாளுக்கு விசேஷமாக பூஜை நடக்கும் ஆனால் திருப்பதியில் பெருமாளுக்குத்தான் பூஜை! 'திருவிழா' ஏனென்றால்
தன் மனைவியை மார்பிலேயே வைத்துகொண்டிருப்பவர் அல்லவோ எம்பெருமான்
"ஸ்ரீனிவாசா கோவிந்தா...

ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா...

புராண்புருஷா கோவிந்தா..!"

என்ற பாட்டு நம்மை ஈர்க்கிறது
பாலாஜியை குலதெய்வமாக வைத்திருக்கும் அனைவரும் இந்த சனிக்கிழமையன்று
சமாரார்தனை செய்வார்கள். என் பெற்றோர்களுக்கு இவர்தான் குல தெய்வம் ஆனதால் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டேன் ஆகையால் மிகுந்த ஈடுபாடு உண்டு
வெங்கடாசலபதியின் படத்தை வைத்து அலங்கரித்து, ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து, மாவிளக்கும் ஏற்றி, எள்ளு அன்னம் பிரசாதம் வைத்து பின் கற்பூர ஆரத்தியுடன் பூஜை முடிவடையும்.
இங்கு ஒரு சின்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது என் பெரியப்பா சமாரார்தனையின் போது சமைக்கும் அரிசியில் கொஞ்சம் உஞ்சுவிருத்தி அதாவது வெளி மனிதர்களிடம்
பிட்சை ஏந்தி அந்த அரிசியையும் கலந்து அன்னம் செய்ய உதவுவார்கள்.

முதல் நாளே...
ஒரு நாலு பேர்களுக்கு சொல்லிவிடுவதால் அரிசியும் கிடைத்துவிடும்
என் பெரியப்பா குளித்து மஞ்சள் நனைத்த வேஷ்டியுடன் யாசிக்க போவார் வீடே பக்தி தூய்மை சுத்தம் என்று விளங்கும், ஒருதடவை எப்போதும் அரிசி கொடுப்பவர்கள் ஊருக்கு
போய் விட்டதால் பிட்சை கேட்காமலே சமைத்துவிட்டார்கள். கற்பூரம் காட்டும் நேரம் வந்தது ஒரு புது மனிதர் வந்தார் திடீரென்று அவர் மேல் அருள் வந்து..."எங்கேப்பா என் பிட்சை அரிசி?"அதில்லாமல் சமைத்து விட்டாயா? என்று கேட்க எல்லோரும் விக்கித்து நின்றோம்.
அந்த மனிதரோ புதியவர். அவருக்கு வீட்டில் நடந்த விஷயம் ஒன்றும் தெரியாது. அப்படி இருக்க எப்படி அவர் இதை சொல்லுகிறார்? அந்த சம்பவம் என்னால் மறக்க முடியவில்லை.
எல்லோரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம் பூஜை மேலே தொடர்ந்தது. அந்த இறை சக்தியை நான் பலதடவைகள் உணருகின்றேன்.


"ஓம் நமோ நாராயணாய!"

No comments: