Thursday, March 29, 2007

ரக்ஷா பந்தன்

எங்கு மேடைப் பேச்சு இருந்தாலும்,சிறு கூட்டமாக இருந்தாலும்
"என் அன்பு சகோதர சகோதரிகளே என்று அழைக்கிறோம்."
"India is my country .we r all brothers and sisters "
என்று பள்ளி அசெம்பிளியில் சத்தியப் பிரமாணம்
எடுக்கிறோம். ஆக சகோதர அன்பு என்பது அளவெடுக்க முடியாத ஒன்று அப்படிப்பட்ட அன்பை மேலும் வெளிப்படுத்தும் நாளாக வருகிறது,ராக்கி பண்டிகை வட நாடு முழுவதும் கொண்டாடும் இந்தப் பண்டிகை
மிகவும் அர்த்தம் உள்ள பண்டிகை..நான் பலவருடங்களாக அங்கேயே இருந்ததால் நானும் இதைக் கொண்டாடுகிறேன் நம்பிக்கையில் இருக்கும் என் பாசமுள்ள சகோதரர் எல்லோருக்கும் மானசீகமாக
ரக்ஷைக் கட்டுகிறேன் அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க என் வாழ்த்துக்கள்
இந்த ராக்கி என்றால் என்ன? புராண கதை என்ன? பார்க்கலாம்
இது ஒரு அன்பு பந்தம் சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டு போடும் ஒரு அன்பு பாலம் இது சிராவண
பூர்ணிமாவில் வருகிறது இதற்கு வயதோ ஜாதி பேதமோ கிடையாது சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய சுபீட்சத்திற்கு ப்ரார்த்தனையும் செய்கிறாள்,பதிலுக்கு அவளுக்கு நிறைய பரிசுகள்
கிடைக்கின்றன முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக் போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் கட்டி “வெற்றியுடன் திரும்பி வா”என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் துருதிராஷ்டருக்கு
வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார்
பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர்.விஷ்ணு பலியின் ராஜ்ஜியத்தைக் காக்க சத்தியம் கொடுத்ததால்
வைகுண்டத்தை விட்டு வந்தார் லட்சுமி தேவி விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம்
தரித்து பலையிடம் அடைக்கலம் புகுந்தாள் அப்போது பூர்ணிமா தினம் அன்றுஅவனை சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள் இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும் நல்லெண்ணம்
வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே .இல்லையா?
ராக்கி வாழ்த்துக்கள் ……….விசாலம்

No comments: