Saturday, March 24, 2007

ஸ்ரீ ஹனுமான் சாலீசா


ஸ்ரீ ராமருக்கு இதைச் சமர்பிக்கிறேன் ஸ்ரீ ராம நவமிக்குள் இதை முடிக்க ஒரு உத்தரவு
உள் மனதில் {intuition } எழுந்து அதை நிரூபிக்கும் வகையில் சனிக்கிழமையன்று என் தோழி
ஸ்ரீ ஹனுமான் சாலீசா புத்தகம் கொடுத்து அதின் அர்த்தமும் கேட்டாள்,,,,,அதனால் நான்
இதைப் பக்தி சிரத்தையுடன் உங்களுக்கு படைக்கிறேன் ஜய் போலோ ஹனுமான் கீ ,,,

ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மனு முகுரு ஸுதாரி !
பர்ந உம் ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி ,,

ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தில் இருக்கும் மகரந்த பொடிகளால் என் மனம் என்ற கண்ணாடியை தூய்மை ஆக்கி தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களைக் கொடுக்கும்
ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் புகழை வர்ணிக்கிறேன்


2 புத்தி ஹீன தநு ஜனிகெ ஸுமிரௌம் பவன ,குமார் ,
பல புத்தி பித்யா தேஹூ மோஹிம் க்லேச பிகார,,


ஹே ! வாயு புத்திரனே என்னுடைய உடலும் புத்தியும் பலம் குன்றியவை இதை நீங்கள்
அறிவீர்கள் என்னுடைய எல்லா கவலைகளையும் விகாரங்களையும் அழித்து விடுங்கள் பிறப்பு இறப்பு என்பதே கிலேசங்கள் நான் தங்களைத் தியானிக்கிறேன்,,,,,,,

சௌபாயீ ,,,,,,,
1
ஜய ஹனுமான் ஞான் குன ஸாகர்
ஜய க்பீஸ திஹூம் லோக் உஜாகர்,,
2 ராம் தூத அதுலித பல தாமா ,
அஞ்சனி .புத்ர பவன ஸுத நாமா

ஹே அனுமான் தங்கள் ஞானம் குணம் ஆழ் கடலைபோல் ஆழம் காண்முடியாதது
ஹே வானரத் தலைவனே மூன்று லோகங்களிலும் தங்கள் புகழ் ஒளிர்கிறது

ராமதூதனே ஈடு இணையற்ற பலம் கொண்டவரே அஞ்சனைப் புத்திரனே வாயு புத்திரனே

3 மஹா பீர பிக்ரம பஜரங்கீ
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
கஞ்சன பரந பிராஜ ஸுபே
காநன குண்டல் குஞ்சித கேஸா

ஹே மஹா வீரரே பாராக்கிரமரே வஜ்ரம் போன்ற உடல் பெற்றவரே துர்புத்துயை அகற்றி நற்புத்தியை பகதர்களுக்கு அளிக்கிறீர்கள் பொன் போன்ற உடல்
காதுகளில் சுருண்ட கேசம் இவைகளுடன் தங்கள்
அழகு மிளிர்கிறது

5ஹாத பஜ்ர ஔ த்வஜா பிராஜை
காந்தே மூஞ்ஜ ஜநேஊ ஸாஜை
6 ஸங்கர ஸுவன கேஸரிநந்தன
தேஜ ப்ரதாப மஹா ஜக வந்தன

கைகளில் வஜ்ராயுதமும் கொடியும் விளங்க
தோளில் தர்பத்தால் ஆன பூணல் அணிந்து இருக்கிறீர்கள்
சிவபெருமானின் அவதாரமே கேசரியின் மைந்தரே
உங்கள் தேஜஸும் பராக்கிரமும் சொல்லி முடியது உலகமே உங்களை வணங்குகிறது

7 பித்யாவாந குநீ அதி சாதுர
ராம காஜ கரிபே கோ ஆதுர
8 பிரபு சரித்ர ஸுநிபே கோ ரஸியா
ராம லஷண ஸீதா மந பஸியா

ஆழம காண முடியாத கலவிக் கடல் நற்குணங்கள்
நிறைந்தவர் திறமை மிக்கவர் ஸ்ரீ ராமனுக்கு சேவையே
முக்கியமாக கருதி அதில் நாட்டம் கொண்டவர்
ஸ்ரீ ராமனின் நற்குண்ங்களை கேட்டு மகிழ்ச்சி
அடைகிறீர்கள் ஸ்ரீராம் சீதா லஷ்மண் உங்கள் இதயத்தில் எப்போதும் குடி கொண்டுள்ளார்கள்,
அவரகள்து இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்

9 ஸூக்ஷம ரூப தரி லங்க ஸங்ஹாரெ
ராம சந்திர கே காஜ ஸம்வாரே
10 பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே
ராமசந்திர கே காஜ் ஸ்ம்வாரே

உங்கள் சிறிய உருவத்தை சீதைக்கு காட்டினீர்கள்
பயங்கர உருவத்தில் இலங்கையை கொளுத்தினீரகள்
பயங்கர உருவத்தில் அரக்கர்களை அழித்து விட்டீர்கள்
ஸ்ரீ ராமரின் காரியங்களை பூர்த்தி செய்தீர்கள்

11 லாய ஸ்ஜீவன லகன ஜியாயே
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே
12 ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ
தும மம ப்ரிய பரதஹி சம பாயீ

ல்க்குவனின் உயிரை சஞ்சீவனீ மலையைக் கொணர்ந்து
வந்து காத்து உயிர் ஊட்டினீர்கள் ரகுபதியும் மகிழ்ந்து
பரதன் போல் ஒரு தம்பி என்று மார்புடன் அணைத்து
கொண்டார்

13 ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவைம்
அஸ கஹீ ஸ்ரீபதி கண்ட லகாவைம்
14 ஸநகாதிக பிரும்ஹாதி முனீஸா
நாரத ஸாரத ஸஹித அஹீஸா

"உன் புகழை ஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷ்னும் பாடிக்கொண்டிருக்கட்டும் என்று சொல்லி ஸ்ரீ ராம்
உங்களை மார்புடன் தழுவிக் கொண்டார்
ஸநகாதி தெவரும் பிரும்மா நாரதர் ஸரச்வதி
ஆதிசேஷன் இவர்கள் புகழ்ந்தாலும் உங்கள் பெருமைக்கு
எல்லை ஏது?

15 ஜம குபேர திக்பால ஜஹாம் தே
க்பி கோபித கஹி ஸ்கே கஹாம் தே
16 தும உபகார ஸுக்ரீவஹிம் கீந்ஹா
ராம மிலாய ராஜ பதா தீந்ஹா

மேலும் யமராஜன் குபேரன் திக்பாலகர்கள் கவிஞர்கள்
வித்வான்கள் பண்டிதர்கள் இவர்கள் எவ்வளவு
புகழ்ந்தாலும் உங்கல் பெருமைக்கு எல்லை ஏது ?
தாங்கள் சுக்கிர்ரீவனுக்கு செய்த உபகாரம் மிகப் பெரிது
ஸ்ரீராமருடன் உற்வாக்கினீர்கள் அவரை அரசனாக்கி
விட்டீர்கள்

17 தும்ஹரோ மந்த்ர பிபீஷ்ந மானா
ல்ங்கேஸ்வர பயே ஸப ஜக ஜானா
18ஜூக ஸஹஸ்ர ஜோஜந பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல பானூ

உங்கள் அறிவுரையை விபீஷ்ணர் கேட்டார் அதனால்
அவர் இலங்கையின் அரசன் ஆனார் எல்லா இடத்திலும்
புகழ் பரவியது பல்லாயிரம் யோஜனைக்கு அப்பால்
இருந்த சூரியனை இனிய பழம் என்று நினைத்து தாவி
பிடித்தீர்கள்

19 பிரபு முத்ரிகா மேலி முக மாஹீம்
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீம்
20 துர்கம் காஜ் ஜகத் கே ஜேதே
சுகம அனுகிரஹ தும்ஹரே தேதே

பிரபு ஸ்ரீ ராம்சந்திரரின் கணையாழியை தன் திருவாயில் வைத்துக் கொண்டு கடலைத் தாண்டிவிடீர்கள் அனாயசமாக அதில் ஒரு வியப்பும் இல்லை

உலகத்தில் எவ்வள்வு கடினமான காரியமும் சுகமாக தங்கள்: கருணையினால் எளிதாக முடிகிறது

No comments: