Thursday, March 29, 2007

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

"ஹேப்பி வெட்டிங் டே அப்பா"
இது என் பெண்ணின் குரல்,
இனிமையான குரல்,
அணைத்துப் பிடித்தேன்,
"தேங்க் யூ.." என் செல்லமே என்றேன்
என் மனைவியைப் பார்த்தேன்.
கன்னம் சிவக்க என் சாந்தி சிரித்தாள்,
சாந்தமான குணம்,
வீட்டில் அவளால் சாந்தி.
பத்து வருடங்கள் முன்.
என் மனம் அசைபோட்டது.
இதே தேதி.
உள்ளே நுழைந்தேன்.
கட்டிலும்,மணக்கும் பூக்களும்
வா வா என்று அழைத்தன.
ஆனால் என் முகத்தில் சந்தோஷமில்லை,
ஆர்வமில்லை,சிரிப்பும் இல்லை,
இந்த நாள் இப்படியா?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
வந்தாள் என் கனவுக்கன்னி,
அருமைக்காதலி,
இன்று என் மனைவி.
எங்கள் காதல் ஒரு புனிதக்காதல்,
நான்கு வருடங்கள் காத்தகாதல்
விரல் நுனிகூட படாத காதல்
இந்த நாள் வருமா என்று ஏங்கிய காதல்
ஆனால் இன்று,
இந்த நாள் ஏன் வந்தது ?
என் மனம் கனத்தது.
எதிர் காலம் இருட்டானது,
உள்ளேஇடி இடித்தது.
என் கனவுக்கன்னி சாந்தி அருகில் .
சற்று நேரம் மௌனம்
கடிகாரம் டிக்..டிக்..என்றசத்தம்
"எனக்கெல்லாம் தெரியும்"
மொழிந்தாள் அவள்
நான் அவள் கையில் முகம் புதைத்தேன்
கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது
ஆண்கள் அழலாமா? நான் அழுதேன்
அவள் தடுக்கவில்லை.
"எப்படி இது………"
என் மேல் முழு நம்பிக்கை.
கிராமத்தில் வைரஸ் சுரம் வந்தது
ஒரு இஞ்சக்ஷன் ….முடிக்கவில்லை நான்
"எப்போது தெரிந்தது?"

என் சாந்தி கேட்டாள்
"ப்ளட் க்ரூப் டெஸ்ட்க்கு போன வாரம் போனேன்"
மேலே பேச முடியவில்லை,
விம்மினேன்.
என் தலையைக் கோதினாள் அவள்
உங்கள் நிழல் போல் நான் இருக்கிறேன்,
கவலை வேண்டாம்"
என்ன அன்பு, என்ன பாசம்
பிரமித்து போனேன்.


"மனப்பொருத்தம் தான் முக்கியம்.
இனி நாம் பிரும்மசாரி{ணி]
வாழ்க்கை என்றபடகை
அன்பு என்ற தோணியால்
அமைதியாக ஓட்டலாமே"
நான் சிலைபோல் ஆனேன்
அவள் எனக்கு பராசக்தி ஆனாள்.
"அப்போது நமக்கு குழந்தை?"
"காப்பகம் சென்று தத்து எடுத்து கொள்ளலாமே"
ஆமாம் என் எய்ட்ஸ்க்கு
அன்பு என்ற மருந்து தந்து,
எனக்கு உயிர் கொடுத்த சக்தி அவள்.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
எனக்கு உயிர் கொடுத்த ரக்ஷகி அம்மா நீ
நான் என் நிலைக்கு வந்தேன் .
நன்றியுடன் அவள் கையைப் பிடித்தேன்.

அன்பினால் எய்ட்ஸ் யையும் குணப்படுத்தலாம்.


விசாலம்

No comments: