ஆற்றின் ஓட்டத்தில் ஓடிப்போகும் வைக்கோல் போல்
எங்கள் ஆணவம் அழிய வேண்டும் கணேசா,
சேற்றினிலே வளரும் செந்தாமரைப் போல்,
நற்பண்பு வளர வேண்டும் விக்னேசா
ஏழை எளியவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும்
மனம் அருள வேண்டும் வினாயகா,
பெற்றோர்களைத் தெய்வமாக மதிக்கும்
சிறந்த எண்ணமும் வேண்டும் விக்னராஜா,
அன்பு என்னும் கடலில் ஊறி அன்பை
வாரி வாரிவழங்க வேண்டும் கணபதியே,
கணபதி காயத்ரி
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ,
தன்னோ தந்திப் ப்ரஜோதயாத்,
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ,
தன்னோ தந்திப் ப்ரஜோதயாத்,
பிள்ளையாரின் தத்துவம்
மூன்று கண்களுடைய தேங்காயை உடைக்கிறோம் மும்மலங்களையும் உடைக்க வேண்டும் நம் ஆணவத்தை
உடைத்து எறிய வேண்டும். பெரிய தலை பெரிய வயிறு, பெரிய மலைபோல் சக்தியுடன் இருக்கிறார்
ப்ரணவஸ்வரூபி அவர் தம் தும்பிக்கையில் ஓம் என்று காட்டுகிறார் கையில் கொழுக்கட்டை அதில்
பூர்ணம், கடவுள் என்றும் பூர்ண ஸ்வரூபி….இதே போல் பலதத்துவம் அடங்கி இருக்கிறது
தோப்புக் கரணத்தின் புராணக் கதை ஒரு சமயம் மஹாவிஷ்ணு சக்கரத்துடன் சிவனை காணச்சென்றார்
அப்போது பிள்ளையார் அதை பிடுங்கி தன் வாயில் போட்டுக் கொண்டார். குழந்தை வாயிலிருந்து
பிடுங்குவது சிரமமான காரியம் என்று நினைத்து அதட்டி மிரட்டவும் முடியாமல் யோசித்து பின்
சிரிக்க வைக்க எண்ணி தன் காதுகளை கைகளால் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து ஆடினாராம்
அதைப் பார்த்துவினாயகர் குலுங்க குலுங்க சிரிக்க விஷ்ணுவின் சக்கிரமும் வெளியே விழுந்தது.
புராணம் எப்படி இருந்தாலும் அது நல்ல தேகப் பயிற்சி, காதுகளின் கீழ்தான் தலையின் மெரிடியன்
புள்ளிகளும்காது மடலில் முதுகு எலும்பு புள்ளிகளும் இருக்கின்றன, அதைப் பிடித்தால் அக்கு ப்ரெஷர் ஏற்பட்டு உடல் கோளறுகள் நீங்குகின்றன தவிர மேலும் கீழும் உட்கார்ந்து எழ
நம் முதுகு எலும்புக்கு வலிமை ஏற்படுகிறது தோர்பி என்ரால் கைகள் கர்ணம் என்றால் காது.
இப்போது அருகம்புல்லின் மஹத்வம்
தூர்வை என்பது அருகம்புல் ஒரு சமயம் கணபதி அனலாசுரனை விழுங்க அவர் உடல் தகித்தது
எது செயதும் உஷ்ணம் குறையவே இல்லை. அப்போது பல முனிவர்கள் இருபத்திநாலு அருகம்புல்லை
நீரில் போட்டு பூஜித்து அவர் தலையில் அபிஷேகம் செய்ய அவர் உஷ்ணம் போனது, அவரை பூஜிப்பது மிக எளிது மஞசளைப் பிடித்தாலும் களிமண்ணைப் பிடித்தாலும் மாக்கல் வெள்ளெருக்கு வேர் என்று எதிலும் செய்துவிடலாம் பூஜைக்கும் புல் இலைகள் என்று எதிலும் பூஜிக்கலாம் இவர் மரத்தடியிலும் இருப்பார்
மலை உச்சியிலும் இருப்பார்,
இப்போது அவரது பதினாறு நாமாக்கள் பார்க்கலாம்
ஸுமுகஸ்சைக தந்தஸ்ச
கபிலோ கஜகர்ணக:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ வினாயக:
தூமகேதூர் கணாத்யக்ஷ, பாலசந்த்ரோ கஜானனா
வக்ரதுண்ட சூர்பகர்ண ஹேரம்ப ஸ்க்ந்தபூர்வஜா
சுமுகன் மங்கள முகம்
ஏகதந்தஸ்ச ஒற்றைக் கொம்பையுடையவன்
கபிலன் கபில நிறமுடையவன்
கஜக்ர்ணன் யானைக்காதை உடையவன்
லம்போதரன் பெரும் வயிறு உடையவன்,
விகடன், குள்ளத்தோற்றம் உடையவன்
விக்னராஜா சகல விக்னங்களையும் போக்கும் ராஜா
வினாயகா இடையூறுகளை நீக்கும் நாயகன்
கணாத்யக்ஷன் பூத கணங்களுக்கு தலைவன்
பால்சந்த்ரன் நெற்றியில் சந்திரன் உடையவன்
வ்க்ரதுண்டன் வளைந்த தும்பிக்கை உடையவன்
சூர்பகர்ணன் முறம் போன்ற காது உடையவன்
ஹேரம்பன் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அருளுபவன்
ஸ்கந்த பூர்வஜா முருகனுக்கு அண்ணன்
இந்த பதினாறு நாமாக்கள் சொல்ல இன்னல்கள் அண்டாது கணபதியின் அருள் கிடைக்கும்
வினாயகர் அகவலும் படிக்க படிக்க மனதில் இருக்கும் அழுக்கு நீங்கி தூய்மை அடையும். அதைப் பின்னால் சொல்கிறேன்
ஓம் கங்கணபதயே நம:
வரும் பிள்ளையார் சதுர்த்தி அன்று முதல் கடவுளான கணபதியை வணங்குவோம்
விசாலம்
No comments:
Post a Comment