Friday, March 30, 2007

அந்தக்காலம்...இந்தக்காலம்..!

மென்மையான மனம், மலர்ந்து
இருந்தது அந்தக்காலம்
அந்த மென் இதழ்கள்,
காய்ந்து போனது இந்தக்காலம்
தாமரை போன்ற இதயம்
இருந்தது அந்தக்காலம்,
அது முட்களால் சூழப்பட்டது
இந்தக்காலம்,
அன்பு பொங்கும் கூட்டுக்குடும்பம்
இருந்தது அந்தக்காலம்
இன்று அன்பில்லாத இருவர் குடும்பம்
ஆனது இந்தக்கால்ம்,
அன்பு சுனையுடன் இதயம்
இருந்தது அந்தக்காலம்
சுனைவற்றி காய்ந்து,
போனது இந்தக்காலம்,
கருணை பூக்கள் குலுங்கிப்
பூத்தது அந்தக்காலம்,
கள்ளிசெடிகள் சூழ்ந்து
நிற்பது இந்தக்காலம்
புருஷன் மனைவி பாசப்
பிணைப்பு அந்தக்காலம்
நிமிடம் ஆனால்
விவாகரத்து இந்தக்காலம்
ஆசிரியர் மதிப்பு ஓங்கி
நின்றது அந்தக்காலம்,
மாண்வன் ஓங்கி ஆசிரியர்
பணிவது இந்தக்காலம்
இயற்கையிலேயே பாடம்
படித்தது அந்தக்காலம்
இயந்திரம் போல் பாடம்,
ஒப்பிப்பது இந்தக்காலம்
லஞ்சம் என்றே பெயரே
கசந்தது அந்தக்காலம்
லஞ்சம் இல்லா வாழ்வு
இல்லை இந்தக்காலம்
பெற்றோர்கள் மேல் பாசம்
பொழிந்தது அந்தக்காலம்,
முதியோர் இல்லத்தில் அவர்களைப்
பார்ப்பது இந்தக்காலம்
கல்யாணங்களில் கூடி
ம்கிழ்வது அந்தக் காலம்
ஈ மெயிலில் மட்டும் வாழ்த்து
தெரிவிப்பது இந்தக்காலம்
மனம் ஏங்கி அழைப்பது
அந்தக்காலத்தை,,
யராவது மாற்றித்
தருவாரா இந்தக்காலத்தை?

No comments: