Thursday, March 29, 2007

வரலட்சுமியின் அருள்



வரலட்சுமி ஆம் வரங்களையெல்லாம் அள்ளி வீசும் அம்பாள் அவள்..இந்த நோம்பு வரும் வெள்ளியன்று வருகிறது. இந்த நோம்பை கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக விடாமல் நோற்று வருகிறேன்.அந்தப் பூஜைசெய்யும் போது ஏற்படும் ஆனந்தத்தை அளவிடமுடியாது. அவளை முறையுடன் சிரத்தையுடன் நம்பிக்கையுடன் வழிபட்டால் செல்வ செழிப்பு ஏற்படும் மனம் நிறைந்து இருந்தாலே செலவம்தானே,
பக்தியுடன் பூஜிப்பவர்களுக்கு அவள் வரங்களை அள்ளிக் கொடுப்பாள்.அருள் புரிவதில் அவளுக்கு நிகர்
அவளேதான்
ஆம் …இந்த லட்சுமி என்பவள் யார்? தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடந்துக்கொண்டே
இருந்தது அதில் இருவருக்கும் பெருத்த அளவில் செல்வங்களை இழந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டன.
அப்போது நாரதர் மூலமாக ஒரு வழி கண்டு பிடித்தனர், அதாவது தேவர்களும் அசுரர்களும் மந்தாகினி
மலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தனர். அப்படிக் கடையும் போது ஜகஜ்ஜோதியாய்
தோன்றினாள் அவள்….மஹாலட்சுமி. அவளுடன் சந்திரனும் பின் அமிருதமும் தோன்றின. தேவர்கள் பூஜித்தார்கள். அவள் அங்கு இருந்த மஹாவிஷ்ணுவை மணந்தாள்,
இந்த நோம்பு ஆவணி மாதம் வரும் பூர்ணிமாவுக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப் படுகிறது
வாழை இலைப்போட்டு அதன் மேல் அரிசி பரப்பி பின் கலசம் வைத்து அம்மனின் அழகான முகம்
பொருத்தி அலங்காரங்கள் செய்து ஆரம்பிக்க வேண்டும் அப்போது அவள் ஆனந்த ஸ்வரூபமாய்
அழகு பிம்பமாக பலவித ஆபரணங்களுடன் ஜுவலிப்பாள். அந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
பிறகு கணபதி பூஜயுடன் ஆரம்பித்து 108 நாமாக்களுடன் அர்ச்சனை செய்துபின் தூபம், தீபம் கற்பூர ஆரத்தி என்று பூஜை முடிவடைகிறது . இந்திரன் அவளைப் பார்த்து பூஜை செய்த தோத்திரம் மிக மிக
சக்தி வாய்ந்தது கடன் இருக்காது, இழந்த பணம் திரும்ப கிடைக்கும், வறுமை இருக்காது நீங்கள் யாராவது
அதை விரும்பினால் எழுதி அனுப்புகிறேன் அதே போல் கனகதார தோத்திரம் ஆதி சங்கராசார்யார்
அவர்கள் ஒரு ஏழை குடிசை முன் பாட அவர் கூரையிலிருந்து தங்க காசுகள் கொட்டின.
பாரதியார் அவர்கள் வர்ணிக்கிறார்,

"பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுகின்ற ரத்தினம் போல்
மேனி அழகுடையாள்,
அன்னையவள், வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி.
பொன்னிரு பொற்றாளை
சரண் புகுந்து வாழ்வோமே"


பின்னர் ஒரு பாடலில் அவர் கூறுகிறார்

செல்வமெட்டுமெய்தி நின்னாற்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை- உலகில்
இல்லையாக வைப்பேன் ……….மலரின் மீதுதிருவே உன் மேல்மையல் பொங்கி நின்றேன்"
வையம் எல்லாம் ஆதரிக்கும் அந்த ஸ்ரீதேவியைப் போற்றுவோம் சிரத்தையுடன் பக்தியுடன் வழிபடுவோம்
அனைவரும் என் இல்லத்திற்கு வந்து அவள் அருளைப் பெறும்படி மனதார அழைக்கிறேன் -- விசாலம்

No comments: