Friday, March 30, 2007

மூன்று வரங்கள்



துக்கம் என்பது வந்ததும்,
துடிப்புடன் அவனை அழைக்கின்றோம்,
"கடவுளே என்னைக் காப்பாயா?
கண்ணீர்த்துளிகளைத் துடைப்பாயா?"
ஏழ்மை என்பது வந்ததும்,
ஏக்கத்துடனே அவனை அழைக்கின்றோம்,

"கந்தா உனக்கு கண்ணில்லையா?
காலம் கடந்தப் பின் வருவாயா?"
கண்ணைப் பணம் மறைத்ததும்,
கடவுளை நாமும் மறக்கின்றோம்,
உழைக்காமல் பணம் வந்துவிட்டால்,
பள்ளத்திலே நாமும் விழுகின்றோம்
தவறான பணம் கை வந்ததும்
மனச்சாட்சியும் நம்மை துரத்தும்,
அழிவுப் பாதையில் நம்மைத் தள்ளும்,
சத்தியம் வென்று, தண்டனை தரும்
பணத்தைப் பார்த்தே மகிழ்கின்றோம்
ஆசை பேராசையை வள்ர்க்கின்றோம்
கடவுளைப் பார்க்கவும் நேரமில்லை,
கடவுளை நினைக்கவும் தோன்றவில்லை,
கடவுளே எனக்கு மூன்று வரங்கள் தா,
கண்ணை மறைக்கும் பணம் வேண்டாம்,
அன்பு துக்கம் வேதனை என்ற மூன்று,
அருமைப் பொருள்களைத் தருவாயா?
இம்மூன்றில் உன்னை நினைப்பேன் நான்,
எப்போதும் விரும்பி அழைப்பேன் நான்
பண்புடன் உன்னைத் தொழுவேன் நான் ,
பரவசமாகிக் களிப்பேன் நான்...

விசாலம்

No comments: